• May 21 2024

கோபி முகத்தில் பணத்தை தூக்கியெறிந்த பாக்கியா- விசிலடித்து கொண்டாடிய எழில்- வீட்டை விட்டு போக மறுத்த கோபி

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியாவிடம் வந்து தானாக சண்டை போடுகின்றார் கோபி. பின்னர் ராதிகாவை கூட்டிக் கொண்டு ஆபிஸிற்கு கிளம்ப பாக்கியா ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க என சொல்லி விட்டு வீட்டிலிருக்கிற எல்லோரையும் கூப்பிடுகின்றர். இப்போது ராதிகா இப்போ எதுக்கு எல்லாரையும் கூப்பிடுறீங்க ஆபிற்கு டைம் ஆச்சு என்று சொல்கின்றார்.


எல்லோரும் வந்ததும் கோபி என்ன பணத்தைக் கொடுக்க முடில எல்லோரும் வீட்டை விட்டு கிளம்புறோம் என்று சொல்ல வந்தீங்களா சந்தோஷம் எங்கையாவது போய் சந்தோஷமாக இருங்க என்று நக்கலாக பேச பாக்கியா வெயிட் பண்ணுங்க நீங்களாவே கற்பனை பண்ணி ஏதாவது பேசுவீங்களா என்று கேட்கின்றார்.

பின்னர் பணத்தை எடுத்துக் கொண்டு வந்து நீட்டி இந்தாங்க நீங்க கேட்ட பதினெட்டு லட்சம் பணத்தை எடுத்துக் கொண்ட உங்க பொண்டாட்டியை கூட்டிட்டு வீட்டை விட்டு கிளம்புங்க என்று கூறிக் கொடுக்கின்றார். அதிர்ச்சியில் உறைந்த  கோபி  இது உண்மையான பணம் இல்லை யாரை ஏமாற்றப்பார்க்கிற எனத் திட்டுகின்றார்.

அப்போது ராமமூர்த்தி பாங்ல தானே வேலை பார்க்கிற இது உண்மையான பணம் தான் எனப் பார்க்க தெரிலையா எனக் கேட்கின்றார். இருந்தும் கோபி இவங்கள எல்லாம் விட்டிட்டு என்னால போக முடியாது என்று சொல்ல பாக்கியா, இவங்களை விட்டிட்டு போக முடியாதா வீட்டுக்கு போலீஸ் வந்தப்போ சும்மா தானே இருந்தீங்க, உங்க வைஃப் உங்க அம்மாவை வீட்டை விட்டு போக சொன்ன போதும் சும்மா தானே இருந்தீங்க.


இனியா பிளஸ் ரூ எழுதிறா என்று தெரிஞசும் அவ ரூமில வந்திருந்தீங்க அவ கோல்ல படுத்து கஸ்டப்பட்டு படிச்சா ரெண்டு நாள் ஸ்கூல்ல இறக்கி விட்டா பொறுப்பான அப்பாவா இருக்க முடியுமா என்று கேட்கின்றார். அந்த நேரம் எழில் விசிலடிக்க இது என்ன சினிமாவா அவ தான் புரியாம பண்ணுறா என்றால் நீயுமா என்று கோபி திட்டுகின்றார்.


அதற்கு எழில் நான் சினிமாக்காரன் தான் ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன் என்று பதிலடி கொடுக்கின்றார்.மேலும் பாக்கியா ராதிகாவிடம் இந்த ஆளு மட்டும் தான் எனக்கு சொந்தமில்லை இவங்க என்னோட குடும்பம் என்று சொல்ல கோபி என்னால இவங்கள விட்டிட்டு போக முடியாது என்று சொல்கின்றார். அப்போது ராமமூர்த்தி நடிக்காதடா நீ இங்க இருந்து போனால் தான் எங்களுக்கு சந்தோஷம் வெளிய போடா எனத் துரத்துகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement