• May 04 2024

ஷீத்தலுடன் உல்லாசம் அனுபவிக்க ஒரு லட்சம் ரூபா..! பப்லுவின் முகத்திரையை கிழித்த பயில்வான்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பப்லு பிரித்விராஜ். இவர் தனது முதல் மனைவி உடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மலேசியாவை சேர்ந்த  24 வயது நிரம்பிய ஷீத்தல் என்பவருடன் உறவில் இருந்தார். 

தன்னை விட 27 வயது குறைவான பெண்ணுடன் பப்லு பிரித்விராஜ் உறவில் இருந்ததால் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தது.சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பப்லு பிரித்விராஜ், நான் ஷீத்தலை பிரிந்து விட்டேன் என்று எங்கேயாவது கூறினேனா? அல்லது ஷீத்தல் எங்கேயாவது கூறினாரா? நீங்களே நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று கூறுகிறீர்கள்.

என்னுடைய வாழ்க்கையில் நிறைய ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறேன். இனி மேலும் திருந்தவில்லை என்றால் நான் முட்டாள் என்று அர்த்தம். இப்போது தான் எல்லாம் எனக்கு புரிகிறது என தாங்கள் பிரிந்ததை பட்டும் படாமல் தெரிவித்திருந்தார்.


இவ்வாறான நிலையில், பப்லு - ஷீத்தல் உறவு குறித்து பயில்வான் ரங்கநாதன் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதன்படி அதில் அவர் கூறுகையில்,

''பப்லு - ஷீத்தல் பிரிவு பற்றி பலரும் பேசுகின்றனர். ஆனால் பப்லு என்னை மட்டும் குறிப்பிட்டு திட்டியுள்ளார். எணக்கு 72 வயது. நான் ஒழுங்காக நடக்க முடியாதவர் என்று சொல்லியுள்ளார். நான் உடற்பயிற்சி செய்து எனது உடலை கட்டுமஸ்தாக வைத்துள்ளேன். நீ எல்லாம் பெரிய மனிதன் என்று ஒத்துக்கொள்ள வேண்டுமா? வார்த்தையை அளந்து பேச வேண்டும். இந்த வயதில் பொம்பள சோக்கு வேண்டுமா? 


மேலும், பப்லு முதலில் பீனா என்பவரை திருமணம் செய்தார். இந்த மனிதருக்கு மூக்குக்கு மேல் கோபம் வரும். அதனால் அடிக்கடி பீனாவுடன் சண்டை போட்டார். அதன்பின் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

அதற்குப்பிறகு, ஷீத்தல் என்னை நிகழ்ச்சி ஒன்றில்தான் சந்தித்தார். அப்போது ஷீத்தல் காதலை சொன்னார். முதலில் கூச்சப்பட்ட நான், அந்தக் காதலை ஏற்றுக்கொண்டேன். அவர் வற்புறுத்திதான் லிவிங் டு கெதருக்கு ஒத்துக் கொண்டதாக பப்லு தெரிவித்தார்.

அதேவேளை, ஒருமுறை ஷீத்தால் ஸ்டார் ஹோட்டலில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சொன்னவுடனே, அந்த ஹோட்டலுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து இரண்டு பேரும் சந்தோஷமாக இருந்திருக்கிறார்கள். 

இவ்வாறு, எல்லா தவறையும் நீ செய்துவிட்டு இப்போது என் மீது கோபப்பட்டால் எப்படி?.. நீ எல்லாம் பேசலாமா?.. கோபத்தில் கூட நியாயம் வேண்டும். மேலும் மேலும் பாவத்தை செய்யாதே' என்றார்.

 

Advertisement

Advertisement

Advertisement