பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியின் மவுஸ் ஓஹோன்னு உச்சத்திற்கு சென்று விட்டது. இதனையடுத்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.
அந்தவகையில் தற்போது இறைவன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குநர் ஐ.அஹமது இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி இருக்கின்றது. ஆனால் படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சியுள்ளது. ஏனெனில் இறைவன் படம் சொல்லிக் கொள்ளுமளவுக்கு இல்லை. இதனால் வசூலிலும் பயங்கர அடி வாங்கியுள்ளது.
அந்தவகையில் இப்படம் முதல் நாளில் ரூ.2.5 முதல் ரூ.3 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!