• Apr 26 2024

திரைத்துறைக்கு குட்பாய் சொல்லப் போகிறாரா நயன்? அதிர்ச்சியில் ரசிகர்கள்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் பலவருடங்களாக விக்னேஷ் சிவனைக் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 


திருமணத்திற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி பல பிரச்சினைகளில் சிக்கி வந்த இவர், திருமணம் முடித்த கையோடு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.


இந்நிலையில் தற்போது நயன்தாரா சினிமாவில் இருந்து விலகப் போவதாக ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நல்ல தாயாக இருந்து தனது இரட்டை குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காகத் தான் அவர் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.


மேலும் கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு, இனி நடிப்பை விட்டு தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி ஆனது தற்போது நயன்தாராவின் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement