• Apr 28 2024

சினிமாவை விட்டு விலகத் தயாரான நயன்தாரா... அதுவும் இந்தக் காரணத்தினாலா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் சினிமாவில் நடிக்க தொடங்கிய காலத்திலிருந்து ஒரு சில காதல் கிசுகிசுக்களில் சிக்கியதோடு, காதல் தோல்வியையும் சந்தித்த ஒருவர். இதிலிருந்து மீண்டெழுந்த இவர் பின்னர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார்


நயன்தாராவின் விக்னேஷ் சிவனுடனான இந்தக் காதலும் முதலில் ஒரு சில விமர்சனங்களை சந்தித்திருந்தது. எனினும் விடாப்பிடியாக இருவரும் சுமார் ஏழு ஆண்டுகள் உருகி உருகி உண்மையாகக் காதலித்து, சமீபத்தில் இருவீட்டாரினதும் பெற்றோர் சம்மதத்துடன் மண வாழ்க்கையில் இணைந்து கொண்டார்கள்.

அந்தவகையில் அழகிய காதல் ஜோடியாக மட்டுமில்லாமல், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட திருமண நட்சத்திர ஜோடியாக வலம் வருகின்ற இவர்கள் இருவரும், திருமணத்திற்கு பிறகும் தத்தமது வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றார்கள்.


அதுமட்டுமல்லாது அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று மிகவும் சுதந்திரமாக தங்களுடைய காதலை வெளிப்படுத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது இரண்டாவது முறையாக நயன்தாரா- விக்னேஷ் சிவன் நட்சத்திர ஜோடி, ஸ்பெயின் நாட்டிற்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கு இவர்கள் சுமார் பத்து நாட்களுக்கு மேலாக பல்வேறு இடங்களுக்கு சென்று என்ஜாய் செய்து வருகின்றனர்.


மேலும் இவர்கள் ஜோடியாக ரொமான்டிக் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது மட்டுமின்றி, ஹனிமூனுக்காகவே பல லட்சங்களை செலவு செய்தும் வருகின்றனர். இந்நிலையில் தற்போது நயன்தாரா எடுத்திருக்கும் ஒரு முடிவு கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது நயன்தாரா தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனுக்காக சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதாவது நயன்தாரா திருமணமான காலம் முதல் இன்றுவரை தன்னுடைய கழுத்தில் உள்ள தாலியை எக்காரணத்திற்காகவும் கழட்டி வைக்கவில்லை. மேலும் மாடர்ன் டிரஸ் மற்றும் ட்ரெடிஷனல் டிரஸ் என எது அணிந்திருந்தாலும் தன்னுடைய தாலியை மறைக்காமல் கணவனுடன் இணைந்து போஸ் கொடுத்து கலக்கி வருகிறார். 


இந்நிலையில் தன்னுடைய குடும்பத்தினரின் அறிவுறுத்தலின் பெயரில் தாலியை மட்டும் எக்காரணத்திற்காகவும் கழட்டி விடக்கூடாது என்பதில் நயன்தாரா இப்போது வரை மிகவும் உறுதியாக உள்ளாராம். அதுமட்டுமல்லாது சினிமாவில் தாலியை கழட்டி வைக்க வேண்டிய நிலை வந்தால் இதற்காக சினிமாவை விட்டு விலகவும் தான் தயாராக உள்ளதாக நயன் கூறியதாக சினிமா வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இவர் இவ்வாறு கூறியதை கேட்டதும் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement