• May 10 2024

கடும் நெருக்கம் காட்டிய அமலாபால்-போட்டோ லீக் செய்வதாக மிரட்டிய முன்னாள் காதலர் -போலீசார் எடுத்த அதிரடி நடிவடிக்கை..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை அமலா பால் அளித்த புகாரின் அடிப்படையில் அவரது முன்னாள் காதலர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் தான் நடிகை அமலா பால். இவர் தமிழில் மைனா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

இப்படத்திற்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகி்னறார்.

இவர் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து 2014ல் திருமணம் செய்துகொண்ட நிலையில் சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக வஜவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

அதன் பின் அவர் ஜெய்ப்பூரை சேர்ந்த பவீந்தர் சிங் என்பவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. அவர்கள் திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவிய நிலையில், அது உண்மை இல்லை.. போட்டோஷூட் தான் என விளக்கம் கொடுத்தார் அமலா பால்.



எனினும் அப்போது இன்ஸ்டாகிராமில் போட்டோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பவீந்தர் சிங் மீது தான் அமலா பால் தற்போது பாலியல் புகார் அளித்து இருக்கிறார்.

விழுப்புரம் அருகில் இருக்கும் ஆரோவில் பகுதியில் அமலா பாலுக்கு சொந்தமான வீட்டில் பவீந்தர் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அத்தோடு  நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் லீக் செய்துவிடுவேன் என அவர் மிரட்டுகிறார் என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.



இந்நிலையில் அமலா பால் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் பவீந்தர் சிங்கை ராஜஸ்தானில் கைது செய்து இருக்கின்றனர். 



Advertisement

Advertisement

Advertisement