நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்து 4 மாதங்கள் ஆகும் நிலையில் தீடீரென அனைவருக்கும் சர்ப்ரைஸ் ஷாக் கொடுக்கும் விதமாக தங்களுடைய ட்வின்ஸ் குழந்தைகளின் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.
இதன் பின்னர் அவர்கள் இருவரும் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றது அதன் பின் தான் தெரியவந்தது.
திருமணம் ஆகி 5 வருடங்கள் குழந்தை இல்லாதவர்கள் தான் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற முடியும் என சட்டம் இருக்கும்போது இவர்கள் எப்படி 4 மாதங்களில் பெற்றார்கள் என சர்ச்சை வெடித்தது. அது பற்றி விளக்கம் கேட்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சரும் கூறி இருந்தார்.
இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதிவாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது சர்ச்சையான நிலையில் முறைப்படிதான்.இவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளார்களா என்று விசாரிக்க அரசுதரப்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரம் குறித்து பேசும் சட்ட வல்லுநர்கள், வாடகைத் தாய் ஒழுங்குமுறை சட்டப்படியா ,சட்டவிரோதமாகவோ, வர்த்தக நோக்கிலோ குழந்தை பெற்றிருந்தால் நயன், விக்கி தம்பதிக்கு 10 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.இந்த விடயம் ரசிகர்களிடத்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!