தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் 100 படங்களுக்கு மேல் நடித்த நடிகை தான் ரம்பா. இவர் தமிழ் தெலுங்கு ,ஹிந்தி ,மலையாளம், கன்னடம் எனப் பல மொழிப் படங்களில் நடித்திருக்கின்றார். இதனால் இவருக்டிகன்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.
அந்த வகையில் இவர் தமிழில் உள்ளைத்தை அள்ளித் தா என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து விஜய் அஜித் கமல் பிரபு தேவா சரத்குமார் எனப் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கின்றார்.
ஒரு கால கட்டத்தில் படவாய்ப்புக் குறைந்ததால் திருமணம் புரிந்ததோடு டி.வி ஷோக்களில் மட்டும் தலை காட்டி வந்தார். பின்பு மூன்று பிள்ளைகளுக்கு தாயான நிலையில் வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது தனது பிள்ளைகளுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருவதையும் காணலாம்.
Listen News!