• May 04 2024

என்னுடைய நீண்ட நாள் ஆசை இப்போது தான் நிறைவேறி விட்டது- முக்கிய ரகசியத்தைக் கூறிய சுந்தர்.சி

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் சுந்தர்.சியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'காபி வித் காதல்.இதனை சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படமானது அக்டோபர் மாதம் 7ம் திகதி வெளியாகவுள்ள நிலையில்  இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.இந்நிகழ்வில்  சுந்தர்.சி பேசும்போது, “நீண்ட நாட்களாகவே ஃபீல்குட் படம் ஒன்றை இயக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். 


படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் படம் முழுவதும் ஒரு புன்சிரிப்புடன் படத்தை பார்க்க வேண்டும் என நினைத்தேன். உள்ளத்தை அள்ளித்தா படத்தை அப்படித்தான் துவங்கினேன். அதில் முதலில் நக்மா தான் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. பின் கதை வேறு விதமாக மாறிவிட்டது. 


அதற்கடுத்ததாக தீயா வேலை செய்யணும் குமாரு படத்தையும் அதேபோல் பீல்குட் படமாக எடுக்கவேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால் சந்தானம் வந்ததும் படத்தின் ரூட்டே மாறிவிட்டது இந்த முறை காபி வித் காதலில் படத்தில் என்னுடைய ஆசை நிறைவேறிவிட்டது என்றும் கூறியிருந்தார்.


Advertisement

Advertisement

Advertisement