• May 19 2024

என் கணவர் இதை தான் சொல்வார்- 2வது திருமணம் செய்யப் போகின்றாரா நடிகை மேக்னா ராஜ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்தவர் தான் நடிகை மேக்னா ராஜ். இவர் தமிழில்  காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இவர் கடந்த  2018-ம் ஆண்டு கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


மேலும் இவர் கர்ப்பமாக இருக்கும் போது இவருடைய கணவரான சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் மரணமடைந்தார்.இந்த சம்பவம் ரசிகர்களை கடும் சோகத்திற்குள் தள்ளியது. அத்தோடு இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.

கணவர் இழந்த சோகத்தில் இருந்த மேக்னா, அதில் இருந்து மீண்டு சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.இந்நிலையில், அவர் 2-வது திருமணம் செய்து கொள்வது பற்றி கூறும்போது, ''இது சமூகத்தின் மனநிலை என்று நினைக்கிறேன். என் கணவர் இறந்த பின்பு, குழந்தையை வளர்ப்பது, அவன் எதிர்காலம் பற்றி சிந்தித்து வருகிறேன்.


 ஒரு கூட்டம் 2-வது திருமணம் செய்யுமாறு சொல்கிறது. சிலர், உங்கள் மகனுடன் மகிழ்ச்சியாக இருங்கள் என்கிறார்கள். நான் எதைக் கேட்பது? நான் அந்த கேள்வியை இன்னும் என்னிடம் கேட்கவில்லை. இந்த தருணத்தை வாழ்ந்துவிட வேண்டும் என்று என் கணவர் சொல்வார். அதனால் நாளை என்ன நடக்கும் என்பது பற்றி யோசிப்பதில்லை. 

இரண்டு நாட்களுக்கு பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது பற்றியும் நினைப்பதில்லை. நான் இன்றை மட்டும் பற்றியே நினைக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement