• May 19 2024

MR. And MRS. சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறிய ஜோடி- வெளியான காரணம்.. ஷாக்கில் ரசிகர்கள்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் கடந்த மூன்று சீசன்களாக வெற்றிகண்ட Mr. and Mrs. சின்னத்திரை தற்பொழுது 4வது சீசன் ஒளிபரப்பாகின்றது.

சின்னத்திரைப் பிரபலங்கள் தமது கணவன் மற்றும் மனைவியுடன் பங்குபற்றும் இந்த நிகழ்ச்சியினை மா கா பா ஆனந்துடன் இணைந்து நிஷாவும் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கோபிநாத் மற்றும் தேவதர்சினி ஆகியோர் இருக்கின்றனர்.

இதில் நடுவர்களாக கோபிநாத் மற்றும் நடிகை தேவதர்ஷினி இருக்கிறார்கள். அதேபோல், நம் அனைவருக்கும் பிடித்த மாகாபா ஆனந்த் மற்றும் அறந்தாங்கி நிஷா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி, மகாலிங்கம் - ராஜேஸ்வரி, சிங்கப்பூர் தீபன் - சுகன்யா, ரஹ்மான் - ஃபரிணா, மதன் - ரேஷ்மா, யோகி - சத்யா, பிரவீன் - ஐஸ்வர்யா, ராம் - ஜானு, ஸ்ரீகுமார் - அணிலா, வசந்தகுமார் - ரேகா என மொத்தம் 10 ஜோடிகள் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளார்கள்.

மேலும் இதில் கடந்த வாரம் எலிமினேஷன் சுற்று நடைபெற்றது. இந்த எலிமினேஷன் சுற்றில் சில காரணங்களால் அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி ஜோடி பங்குகொள்ளவில்லை.

இதனால், அவர்களே போட்டியில் இருந்து விலகி கொள்கிறோம் என்று கூறிவிட்டார்கள் என அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி ஜோடியை நடுவர்கள் கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி ஒன்றாக முடிவெடுத்து, Mr. and Mrs. சின்னத்திரை சீசன் 4ன் முதல் ஏவிக்ஷன் செய்துள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement