மாடலிங் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த மீரா மிதுன், '8 தோட்டாக்கள்' விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யாவுடன் 'தானா சேர்ந்தக் கூட்டம்' ஆகிய சில படங்களில் நடித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் ரொம்பவே பிரபலமான அவர், அதே வேகத்தில் பல சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார்.
அதாவது பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் பெற்றுள்ள முன்னேற்றம் குறித்து, சமூக வலைத்தளங்களில் சர்ச்சையான கருத்துடன் வீடியோ வெளியிட்டார் மீரா மிதுன்.
இதனால் மீரா மிதுன் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து, அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இருவரையும் கைது செய்தனர். எனினும் இதன் பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர்.
மேலும் இந்த வழக்கில் இருவர் மீதும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆகஸ்ட் 6ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால் அந்த அன்று நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காமல் தலைமறைவாகி உள்ளார் மீரா மிதுன்.
இந்நிலையில் இந்த வழக்கின் முதன்மை அமர்வானது மீண்டும் நீதிமன்ற நீதிபதி அல்லி முன் செப்டெம்பர் 28ம் தேதியும் விசாரணைக்கு வந்தது. எனினும் அன்றும் மீரா மிதுன் அடிக்கடி இருப்பிடத்தை மாற்றி தலைமறைவாக இருந்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீரா மிதுனின் தாயார் தற்போது தனது மகளைக் காணவில்லை எனக்கூறி சென்னை ஆணையர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்துள்ளார். அதாவது மீராமிதுனைக் காணவில்லை என்றும், கண்டு பிடித்துத் தருமாறும் கூறி அந்தப் புகாரினை அளித்திருக்கின்றார்.
இந்த செய்தி ஆனது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. எனினும் போலீஸார் தலைமறைவாகி இருக்கும் மீரா மிதுனை கண்டு பிடிக்கும் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
Listen News!