தமிழ் சின்னத்திரை சீரியல் மூலம் மக்களுக்கு பரீட்சயப்பட்ட நடிகர் கார்த்திக் ராஜ். இவர் விஜய் டிவியின் ‘கானா காணும் காலங்கள்’ சீரியல் மூலம் திரையில் அறிமுகமானார். இந்த சீரியலில் இவருக்கு கிடைத்த வரவேற்புகளை அடுத்து ‘ஆபிஸ்’ என்ற தொடரில் நடித்திருந்த கார்த்திக் ராஜிற்கு இந்த சீரியல் மக்கள் மத்தியில் நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது.
ஆபீஸ் சீரியலில் கார்த்திக் நடிக்கும் போதே இவர் பலதரப்பட்ட பெண் ரசிகைகளையும் கவர்ந்திருந்தார். அதற்கு பிறகு இவர் நடித்த 'செம்பருத்தி' சீரியலில் மூலமாக வீட்டில் அம்மா பாட்டி வரைக்கும் அனைத்து ரசிகர்களின் மனதை கவர்ந்து இப்படி ஒரு பிள்ளை வேண்டும் என்று இவருக்கு ஆதரவு கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இவர் செம்பருத்தி சீரியலில் இருந்து விலகியதும் அவருடைய தீவிரமான ரசிகர்கள் பலர் அந்த சீரியலை பார்ப்பதை விட்டு விட்டார்களாம். அதனால் செம்பருத்தி சீரியல் டிஆர்பி யில் பின்னுக்கு சென்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஒரு சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கார்த்திக் ராஜ் சின்னத்திரைக்கு வருகிறார் என்ற செய்தி வெளியாகி இருந்தது. அதுவும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தான் என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கின்றது.
இவ்வாறாக சின்னத்திரையில் சின்னத்திரையில் அசத்தி வந்த கார்த்திக் ராஜ் தற்போது 'பிளாக் அன்ட் வைற்' என்ற படத்தின் வாயிலாக வெள்ளித்திரையிலும் தோன்ற இருக்கின்றார். இப்படத்தின் உடைய ட்ரெயிலர் ஆனது இன்று இரவு 8மணிக்கு வெளியாக இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை கார்த்திக் ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார்.
அதாவது அப்படத்தினுடைய போஸ்டரை பதிவிட்டு "அன்பர்களே, உங்கள் அனைவரின் அன்பு, ஆதரவு மற்றும் பிரார்த்தனையால் நாங்கள் இதைச் செய்தோம். உங்கள் ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார். இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் பெரும் மகிழ்வோடு இருப்பதோடு அவருக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!