கார்த்திக் சிவகுமார் என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த பருத்தி வீரன் எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.
மேலும் இவரின் நடிப்புத்திறனால் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், எடிசன் விருதுகள், தமிழக அரசு திரைப்பட விருதுகள் போன்ற பல விருதுகள் வென்றார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் வெளியான பாென்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டார்.
மேலும் இப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் தான் சர்தார். மேலும் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கண்ணா ஜோடி சேர்ந்த நடிக்க ஜி.வி.பிரகாஷ் தான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மேலும் இப் படம் நேற்று ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் முதல் நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ. 4.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
Listen News!