• Apr 15 2026

சரவணனின் வார்த்தையால் மயில் எடுத்த சோகமான முடிவு.! பரிதாபப்படும் மீனா.! டுடே ப்ரோமோ

shali / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் அதிரடித் திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியல் தற்பொழுது சரவணன்- மயில் விவாகரத்தால் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. 

இந்நிலையில், தற்பொழுது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், பாக்கியம் மயிலைப் பார்த்து சொன்னது எதையுமே சரியாக செய்யாமல் தன்ர வாழ்க்கையை வீணாக்கிட்டு இருக்கிறாள் என்று சொல்லிப் பேசுறார். மேலும், மயிலை என்ர கண்ணு முன்னாடி நிற்காமல் வேற எங்கயாவது போய்டு என்கிறார் பாக்கியம். 


அதைத் தொடர்ந்து மயில் சரவணன் கிட்ட போய் வீட்டில அம்மா பேசிட்டு இருக்கிறா என்று சொல்லுறார். அதைக் கேட்ட சரவணன் என்ன பேசுறதா இருந்தாலும் கோர்ட்டில வந்து பேசு, இனிமேல் என்ர வாழ்க்கையில மட்டும் வந்திடாத என்கிறார். அதைக் கேட்ட மயில் அழுது கொண்டே ரோட்டில நடந்து போறதை மீனா பார்த்து விட்டு அவரைக் கூப்பிடுறார். இதுதான் இனி நிகழவிருப்பது... 

Advertisement

Advertisement