• May 19 2024

பகடைகாய்களை வைத்து பந்தயம் ஆடும் மாயா... சைக்காலஜி மூலம் விளையாடி அணி சேர்க்கும் விசித்ரா... இறுதியில் வெல்ல போகும் அணி எது?

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றிய விவாதம் தான் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. எந்த சீசனிலும் இந்த அளவுக்கு சர்ச்சை கிடையாது என்ற கருத்துக்களும் நிறைந்திருக்கிறது. அந்த வகையில் பிக்பாஸ் வீடு இப்போது மாயா, விசித்ரா என இரு அணிகளாக பிரிந்துள்ளது. 


மாயா அணியில் பூர்ணிமா, ஜோவிகா, விக்ரம், அக்ஷயா, பிராவோ, நிக்சன், கானா பாலா ஆகியோர் இருக்கின்றனர். இவர்களை தன்னுடைய அல்லக்கைகளாக மாற்றும் மாயா பல யுக்திகளை கையாளுகிறார். அதில் படை தளபதி போல் செயல்படும் பூர்ணிமா எதிராளிகளை காலி செய்ய நன்றாகவே வேலை செய்கிறார்.தற்போது மக்கள் ஆதரவை பெற்றிருக்கும் எதிரணியை சாய்க்க வேண்டும் என இந்த சைக்கோ கூட்டம் கூட்டு சதியில் ஈடுபட்டு வருகிறது.


சைக்காலஜி படித்திருக்கும் விசித்ராவிற்கு எங்க எப்படி பேசணும் என நன்றாகவே தெரிந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஓட்டுகளை பெறுவதற்காக எந்த வழியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற யுக்தியும் தெரிந்திருக்கிறது. அதனாலே இப்போது அவர் கடுமையான போட்டியாளராக மாறி இருக்கிறார்.


எந்த சீசனிலும் மூத்த கலைஞர்கள் இத்தனை நாள் வீட்டில் தாக்குப் பிடித்தது கிடையாது. ஆனால் விசித்ரா திறமையாக விளையாடுவதன் மூலம் அதை செய்து காட்டியிருக்கிறார். அதேபோன்று இவருடைய அணியில் அர்ச்சனா, தினேஷ், மணி, ரவீனா, கூல் சுரேஷ் ஆகியோர் இடம் பிடிக்கின்றனர்.


எதிலும் ஒட்டாத ஒரு கேரக்டர் விஷ்ணு தான் இரண்டு பக்கமும் மாறி மாறி சண்டை இழுப்பது தான் இவருடைய வேலை. இவ்வாறாக இந்த அணி மாயாவுக்கு ஆட்டம் காட்டி கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த இரு அணிகளின் தலைவர்கள் நிச்சயம் இறுதி போட்டி வரை வருவார்கள்.


அதில் வெற்றி யாருக்கு என்பது தான் சுவாரஸ்யம் கலந்த எதிர்பார்ப்பாக உள்ளது. இறுதியில் எந்த அணி வெல்லும் அந்த போட்டியாளர் வெற்றி பெறுவார் என்பதை 100 நாள் முடிவிலே தெரியவரும். அதுவரையில் பொறுமையுடன் பார்ப்போம்.

Advertisement

Advertisement