• May 19 2024

39 வயதில் திருமணமா..? குத்துப்பட ரம்யா வெளியிட்ட அறிவிப்பு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கன்னட நடிகையான ரம்யா, புனீத் ராஜ்குமாருடன் இணைந்து அபி என்ற படத்தின் மூலம் நடிகையானார். நடிகை திவ்யா ஸ்பந்தனா என்ற பெயரை சினிமாவுக்காக ரம்யா என மாற்றிக் கொண்டார். கன்னடத்தில் பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் ரம்யா.


மேலும் சிம்பு நடித்த குத்து படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இதையடுத்து, தனுஷூடன் பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு என மொத்தம் 36 படங்களில் நடித்து அசத்தி உள்ளார். 2016 ஆம் ஆண்டு வெளியான நாகரஹாவு என்ற கன்னட படம் தான் இவர் நடித்த கடைசி படம்

இவ்வாறுஇருக்கையில் கர்நாடகாவை சேர்ந்த இவர் நடிப்பை தான்டி  தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.



தற்போது அவருக்கு 39 வயதாகும் நிலையில் நேற்று அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டிருந்தார். நேரம் வந்துவிட்டது என அவர் சொன்னதை பார்த்த நெட்டிசன்கள் அவர் திருமணம் பற்றி தான் அறிவிக்கப்போகிறார் என நினைத்தனர்.


அது என்னவாக இருக்கும் என பல்வேறு கணிப்புகன் ரசிகர்கள் கமெண்டில் கூறி வந்தனர். இந்நிலையில் தற்போது திவ்யா வெளியிட்டு இருக்கும் மற்றொரு பதிவில் தான் மீண்டும் நடிக்க வருவதாக கூறி இருக்கிறார். எனினும் அது மட்டுமின்றி அந்த படத்தை அவரே தான் தயாரிக்க போகிறாராம்.



அத்தோடு இத் திருமணம் பற்றி அறிவிப்பார் என எதிர்பார்த்தவர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.






Advertisement

Advertisement