தமிழ் சினிமாவில் சமூகக் கருத்துள்ன திரைப்படங்களை இயக்கும் இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர் தான் மாரிசெல்வராஜ். இவரது இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் பரியேறும் பெருமாள்.இப்படத்தில் கதிர், ஆனந்தி, யோகிபாபு ஆகியோர் நடித்திருந்தனர்.
இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் ப்ரோடக்ஷன் இப்படத்தை தயாரித்திருந்தது. ஜாதிவெறி, அந்த ஜாதிவெறியின் கொடூரம் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் நீண்டிருப்பது, ஒடுக்கப்பட்டவர்களின் மீது மிக நுணுக்கமாகவும் வெளிப்படையாகவும் அனைத்து இடங்களிலும் நடத்தப்படும் வன்முறை, அந்த வன்முறையால் ஒடுக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்பவற்றை இப்படம் எடுத்துக் காட்டுகின்றது.
இந்த படத்தில் கதிரின் தந்தையாக நடித்த தங்கராஜ் ஒரு தெருக்கூத்து கலைஞராவார். இப்படத்தில் இவரை அறிமுகம் செய்த விதமும் பெண் சாயலுடன் அவர் நடித்ததும் படத்திற்கு மிகவும் பிளஸ்சாக அமைந்து இருந்தது இவரை தேடிச்சென்று இந்த படத்தில் அறிமுகப்படுத்தினார் மாரிசெல்வராஜ்.
இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள தங்கராஜ், பரியேறும் பெருமாள் படப்பிடிப்பின் போது, ஒரு காட்சியில் இப்படி நடிக்க வேண்டும் அப்படி நடிக்க வேண்டும் என்று சொன்னார் மாரிசெல்வராஜ். உடனே, நான் எங்கோ தெருவுல நிம்மதியாக ஆடிக்கிட்டு இருந்தேன் இங்கே கூட்டிவந்து இப்படி பண்றீங்களே என கேட்டேன்.
உடனே என் கன்னத்தில் ஓங்கி அறைந்து, நீ செத்து போனபிறகும் இந்தபடத்தை பார்க்கும் அனைவரும் உன்னையும், உன் கலையையும் பார்த்து கொண்டாடுவார்கள், காலத்தால் அழிக்கமுடியாத கலைஞன் நீ என்று சொன்னார். அவர் சொன்னது போல படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆனபோதும் பலர் என்னை பாராட்டி வருகிறார்கள். இந்த பெருமை மாரி செல்வராஜால் எனக்கு கிடைத்தது என்று தங்கராஜ் உருக்கமுடன் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- அஜித் சொல்லி சூப்பர் ஹிட் படத்தை நடித்த பிரபல நடிகர்-அட இவரா..?
- அட்லீ படத்தை பிரம்மாண்ட தொகைக்கு வாங்கிய முன்னணி நிறுவனம்
- அருண் விஜய்யின் ஆசை இது தானா..? அவரே கூறிய தகவல்..!
- நயன்தாரா பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷாருக்கான்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!