• May 07 2024

ஐஸ்வர்யா ராய் தான் என்னோட சொய்ஸ் அதை எப்பவும் மாற்ற மாட்டேன் பிடிவாதமாக நின்ற மணிரத்னம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். ,ப்படம் வெளியாகி 300 கோடி வரை வசூல் செய்து விட்டதாக லைகா நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. இப்படம் தியேட்டர்களில் சக்கை போடு போட்டு வருகின்றது.

இந்தப் படத்தில்  விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் இந்த படத்தை ஏற்கனவே ஒருமுறை எடுக்க நினைத்து அது முடியாமல் கிடப்பில் வைத்தார் மணிரத்னம். அதனால் இப்போது மீண்டும் தொடங்கிய போது பல கதாபாத்திரங்களுக்கு முன்பு முடிவு செய்து வைத்திருந்த நடிகர்களை மாற்றினர். ஆனால் நந்தினி கதாபாத்திரத்தில் மட்டும் ஐஸ்வர்யா ராய்தான் நடிக்க வேண்டும் என மணிரத்னம் உறுதியாக இருந்தாராம்.


அந்த அளவுக்கு இந்த கதாபாத்திரத்தை அவரால் சிறப்பாக செய்யமுடியும் என மணிரத்னம் நம்பிக்கை வைத்துள்ளார். 

அதே போல ஆதித்ய கரிகாலனாக விக்ரமைத் தான் கேட்டார் என விக்ரம் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக இப்படத்தின் பிரபலங்கள் பல பேட்டிகளில் பங்குபற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement