• May 09 2024

டிவி நடிகையின் பணத்தில் சொகுசு வீடு-அதிரடியாக கைது செய்யப்பட்ட காதலன்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பெங்காலி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த பல்லவி டே மே 15ம் தேதி கொல்கத்தாவில் இருக்கும் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் சாக்னிக் சக்ரபர்த்தி என்பவரை காதலித்து வந்தார். இருவரும் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வந்தார்கள்.

இவ்வாறுஇருக்கையில் திங்கட்கிழமை இரவு முதல் சாக்னிக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்திருக்கிறார்கள். பல்லவியின் பணத்தை அவர் செலவு செய்தது தெரிய வந்திருக்கின்றது. பல்லவியின் வருமானத்தில் ரூ. 80 லட்சத்துக்கு வீடு, சொகுசு கார் வாங்கியிருக்கிறார் சாக்னிக்.

மேலும் பல்லவி டே இறந்த 48 மணிநேரத்தில் சாக்னிக் சக்ரபர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். சாக்னிக் சக்ரபர்த்தி தங்கள் மகளை உடல் அளவிலும், மனதளவிலும் கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அவரின் வருமானத்தை எல்லாம் செலவு செய்துவிட்டதாகவும் பல்லவியின் பெற்றோர் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

சாக்னிக் சம்பாதித்தாலும் அவரின் வருமானத்தில் சொகுசாக வாழ முடியாது என்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள். சாக்னிக் முன்பே திருமணமானவர். அத்தோடு விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார். அதிலிருந்து பல்லவியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement