• May 04 2024

பப்லுவுடன் மீண்டும் காதலா? இருவரும் இணைந்து எடுத்த செல்பியை வெளியிட்ட ஷீத்தல்! ஆனாலும் ஒரு ட்விஸ்ட்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபல நடிகராக காணப்படும் பப்லு பிரித்விராஜ்  24 வயது பெண்ணான ஷீத்தல் என்பவருடன்  லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். 

இதை தொடர்ந்து, இருவரும் இணைந்து வீடியோ போடுவது, புகைப்படங்களை பகிர்வது என தமது வாழ்க்கையை சந்தோசமாக நகர்த்திச் சென்றனர்.


சமீபத்தில் இருவரும் பிரிந்து விட்டனர் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. ஆனாலும், பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பப்லு பிரித்விராஜ், நான் ஷீத்தலை பிரிந்து விட்டேன் என்று எங்கேயாவது கூறினேனா? அல்லது ஷீத்தல் எங்கேயாவது கூறினாரா? என விளாசி இருந்தார். இந்த விஷயம் சோசியல் மீடியாவில் ஒரு சர்ச்சை ஏற்படுத்தும் அளவிற்கு பூகம்பமாக வெடித்தது.


ஆனாலும், அவர்கள் இருவரும் இணைந்ததாகவோ, இல்லை பிரிந்து இருந்ததற்காக ஆதாரமோ எந்த வகையிலும் சிக்கவில்லை.

எனினும், பப்லுவை பிரிந்த ஷீத்தல் ஜிம் ஒர்க்கவுட் வீடியோக்களையும், தனது தனிப்பட்ட விடீயோக்களை மட்டுமே பகிர்ந்து வந்தார். பப்லுவுடன் இருந்த வீடியோ, போட்டோ என்பவற்றை நீக்கி இருந்தார்.

இந்த நிலையில், இன்றைய தினம் அனைவரின் கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் பதில் தரும் வகையில் ஷீத்தல் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதன்படி, அனிமல் பட பிடிப்பின் போது பப்லுவுடனும், ராஷ்மிகாவுடனும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டரா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஷீத்தல்.

இதனை அவதானித்த ரசிகர்கள், மீண்டும் அவர்கள் இணைந்துவிட்டார்கள் என்ற மகிழ்ச்சியில் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். 


Advertisement

Advertisement

Advertisement