தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினி நடிப்பில் கூலி திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். தொடர்ந்து சூர்யாவை வைத்து "rolex " படத்தை இயக்கவுள்ளதாக சமீபத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இவருக்கு மனசுக்குள் ஹீரோ ஆகுவதற்கான ஆசை ஒன்று இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த படத்தினை சண் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் படத்தினை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் தற்போது பேட்டி ஒன்றில் தனது சினிமா வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.
குறித்த பேட்டியில் "பத்து படம்தான் இயக்குவேன் என சொன்ன பின் ஒரு நிகழ்வில் முக்கியமான இரண்டு இயக்குநர்கள் என்னிடம், 'சினிமா உள்ளே வருவதோ வெளியே போவதோ நம் கையில் கிடையாது. அதை சினிமாவேதான் முடிவு செய்யும். எனவே இத்தனை படம்தான் என நீங்கள் எப்போதும் சொல்லாதீர்கள்' எனக் கூறினர் எனவே எத்தனை படம் வருகிறதோ செய்யலாம்" என கூறியுள்ளார்.
Listen News!