• Apr 30 2024

SK மேட்டர விடுங்கப்பா..! இமான் அவரை 'அம்மு' என்று தான் அழைப்பாராம்! அமலி பரபரப்பு பேட்டி

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், நம்ம வீட்டுப் பிள்ளை, சீமராஜா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியவர் டி.இமான்.

சிவகார்த்திகேயன் திரையுலகிற்கு அறிமுகமானது முதல் பல ஹிட் பாடல்களை இமான் வழங்கி அவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் இமான். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சிவகார்த்திகேயனும் இமானும் எந்த திரைப்படங்களிலும் இணைந்து பணியாற்றவில்லை.

இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இமான், 'இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மீண்டும் பயணிக்கிறது கஷ்டம். வரும் காலங்களில் அவரது படங்களில் பணியாற்ற மாட்டேன். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளார். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. வெளிப்படையாக சொன்னால் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கப்படும். என் வாழ்க்கையில் நடந்த துன்பங்கள்இ வலிகளுக்கு சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய காரணம். அவருடன் மிகவும் நெருக்கமாக பழகியதால், அவர் செய்த துரோகத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.' எனத் தெரிவித்திருந்தார். இது குறித்த பேச்சு தான் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பேசப்பட்டு வருகின்றது.


இந்நிலையில் இமானின் இரண்டாவது மனைவி அமலி ஒரு சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

'நான் எப்போதும் இமானை வீட்டில் அத்தான் என்றுதான் அழைப்பேன். அவரும் என்னை ஆசையாக அம்மு என அழைப்பார்'அவர் மிகவும் ரொமான்டிக்கான மனிதர். நிறைய சர்பிரைஸ்களை கொடுப்பார். அவர் மிகவும் அமைதியானவர். எப்போதும் சாந்தமாகவே இருப்பார். அதனால் அவர் செய்யக் கூடிய செயல்கள் அனைத்திலுமே அன்பு என்பது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். 

அவரது வாழ்க்கையில் முதலில் மகள் நேத்ராவுக்குத்தான் முதலிடம் (இவர் அமலியின் மகள்). இரண்டாவது இசைக்கு முக்கியத்துவம் கொடுப்பார். மூன்றாவது நான். அவருக்கு முதன்முதலில் நான் பரிசாக கொடுத்தது நேத்ராவின் பல்லுதான். சிறு வயதில் விழுந்த நேத்ராவின் பற்களை சேமித்து வருகிறேன். அதில் ஒன்றை அவரிடம் கொடுத்து இது விலை மதிப்பில்லாதது என கூறினேன்' இவ்வாறு அமலி தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Advertisement

Advertisement