• Apr 28 2024

வேவு பார்க்கிறாங்க.. எங்க போனாலும் ஃபாலோ பண்ணுறாங்க.. பகீர் குற்றச்சாட்டை முன்வைத்த கங்கனா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகின் முன்னணி பெண் நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் பிரபலங்களின் மீதான சர்ச்சைகளை கிளப்புவதில் ரொம்பவே பேமஸ் ஆனவர். அந்த வகையில் பாலிவுட் சினிமாவின் உடைய பிரபலங்கள் பலரின் மீதும் தொடர்ந்து பல குற்றங்களை முன் வைத்து வருகின்றார்.


அந்த வகையில் தற்போதும் இவர் பாலிவுட்டின் பிரபல தம்பதி மீது ஒரு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். அதாவது கங்கனா ரனாவத் முன்வைத்துள்ள குற்றச்சாட்டில் அவர் குறிப்பிட்டுள்ள விடயம் என்னவெனில் தன்னை ஒரு பிரபல தம்பதி உளவு பார்க்கிறார்கள் என்பது தான். இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில் பார்க்கிங் ஏரியா, பொது இடம், தெரு, பால்கனி என எங்கு சென்றாலும் அவரை உளவு பார்ப்பதாகவும் ஜூம் லென்ஸ் பயன்படுத்தி எந்நேரமும் அவர் செய்யும் விஷயங்களை நோட்டமிடுவதாகவும் பலவாறு குற்றம் சாட்டியுள்ளார். 


நடிகை கங்கனா யாரை பற்றி இப்படி தாறுமாறாக குற்றம் சாட்டுகிறார் என்பதை வெளிப்படையாக கோரவில்லை என்றாலும் நெட்டிசன்கள் பலரதும் யூகங்களின் படி அது ரன்பீர் கபூர் - ஆலியா பட் தம்பதியினராக இருக்குமோ என சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். 


மேலும் இது குறித்து அவர் இரு தினங்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அறிக்கை ஒன்றினையும் பதிவிட்டு இருந்தார்.  அதில் அவர் கணவர் செய்யும் குற்றங்களை பற்றி மனைவி தெரிந்து இருந்தாலும் அவரை சரி செய்வதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளாமல் கணவரை இது போன்ற கீழ்த்தரமான செயல் செய்ய ஊக்குவித்து வருவதாக கூறி குற்றம் சாட்டியுள்ளார். 


அத்தோடு "பிரபலமான நட்சத்திரங்களை குறி வைத்து தாக்கினால் மட்டுமே அவர்களால் பிரபலமாக முடியும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதை தான் அவர்களும் செய்கிறார்கள்" எனவும் தெரிவித்து இருக்கின்றார். இவ்வாறு பிரபல தம்பதி தன்னை வேவு பார்த்து வருவதாக கங்கனா ரணாவத் கூறியுள்ளமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement