• May 13 2024

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கமல்-இது தான் காரணமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்ல கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக உழைத்துக்கொண்டிருப்பவர் உலகநாயகன் கமல்ஹாசன். நடிப்பிற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுக்க தயங்காத நடிகர் தான் இவர்.

நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், கதாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவராக திகழும் இவர் மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாக கமலின் படம் வெளியாகாததால் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் வருத்தத்தில் இருந்தனர். அந்த வருத்தத்தை போக்க தற்போது கமலின் விக்ரம் திரைப்படம் வெளியாகவுள்ளது.

கமல் விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு பிறகு இந்தியன் 2 படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் சில பிரச்சனைகளால் கிடப்பில் போடப்பட்டது. அதைத்தொடர்ந்து கமல் அரசியல், டிவி நிகழ்ச்சி என பிஸியானார். எனவே இனி கமல் படங்களில் நடிக்கமாட்டார் என்ற பேச்சுக்கள் ரசிகர்களிடம் பரவ ஆரம்பித்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் கமல் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடிப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இப்படத்தில் அனிருத் இசையமைப்பதோடு இப்படத்தை கமலே தனது ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக தயாரித்துள்ளார். கமலுடன் இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகிய பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் எல்லாம் முடிவடைந்து ஜூன் 3 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம் தயாரித்துள்ளது. இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில், பேசிய கமல், நான்கு ஆண்டுகளாக என் படங்கள் வெளியாகவில்லை. அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் நான் ஒரு ரூபாய் செலவு செய்தால், என் ரசிகர்கள் ரூ.20 செலவுசெய்வார்கள், லோகேஷ் கனகராஜிற்கு இப்போது நன்றி கூற மாட்டேன். வேறு மாதிரி நன்றி சொல்லுகிறேன்.இப்படம் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும். இது வெற்றிப்படமாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/zLrMOjBkRZU

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement