• May 05 2024

நான் பண்றதுக்கு முதல் கமல் சேர் பண்ணிட்டார் மற்றவங்களுக்கு என்ன பிரச்சினை- மீனாவின் எக்ஸ்குளுசிவ் இன்டர்வியூ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் இருந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் மீனா. தனது கண்ணழகினாலே ரசிகர்களின் மனதைக் கவர்ந்த இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ஆகிய பல மொழிப் படங்களில் நடித்திருக்கின்றார். இது தவிர தமிழில் அஜித், ரஜினி, கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்பொழுதும் இவர் பிஸியாக நடித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முதல் இவருடைய கணவர் நுரையீரல் பிரச்சினை காரணமாக இறப்புக்குள்ளார். இவரது இறப்பிற்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் சென்றிருந்ததோடு இரங்கலும் தெரிவித்திருந்தனர்.


நீண்ட நாட்கள் கவலையில் இருந்த மீனா தற்பொழுது நண்பர்களின் உதவியுடன் அந்த இழப்பில் இருந்து மீண்டு வந்துள்ளதோடு பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது நான் கணவர் அழந்தவுடன் அந்த துன்பத்தில் இருந்து மீண்டு வருவேன் என்று நினைக்கவில்லை. இதெற்கெல்லாம் காரணம் எனது அம்மா குடும்பம் மற்றும் நண்பர்கள் தான்.

பொதுவாக நான் நண்பர்களின் விஷேசங்களுக்கு போயிருக்கின்றேன். ஆனால் என்னோட கஷ்டத்தில நிறைய பேர் இருந்திருக்கிறாங்க. எனக்கு தெரியாதவங்க கூட வந்து ஆறுதல் சொன்னாங்க. நான் இதை எதிர்பார்க்கல.இது தவிர சில ப்ரண்ஸ் என் கூடவே இருந்து வெளில கூட்டிட்டு போறது ,என் கூட டைம் இஸ்பென்ட் பண்றது என எல்லாமே செய்தாங்க அவங்களால தான் நான் இப்போ அந்த துன்பத்தில இருந்து விடுபட்டிருக்கின்றேன் என்று கூறினார்.


மேலும் உங்கள் கணவரின் இறப்பிற்கு காரணம் என்ன என்று கேட்ட போது அவர் ஹைதராபாத்தில் தங்கியிருந்த இடத்தில புறாக்கள் அதிகமா இருந்திருக்கு அதன் எச்சத்தை சுவாசித்ததால அவருடைய நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்திச்சு. இதற்கான அறிகுறி எதுவும் தெரில.கொரோனா எங்க வீட்டில எல்லோருக்கும் வந்திச்சு ஆனால் அது எல்லாருக்கும் குணமாகிடுச்சு. அவருக்கு ஏற்கனவே நுரையீரல் பிரச்சினை இருந்ததால தான் இன்னும் பாதிப்பு அதிகமா வந்திச்சு அதனால தான் இப்படி ஆகிட்டு என்று கூறினார்.

மேலும் நுரையீரல் கிடைத்திருந்தால் கண்டிப்பாக கணவரைக் காப்பாற்றி இருக்க முடியுமா என்று தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பதில் கூறிய மீனா கண்டிப்பா காப்பாற்றி இருந்திருக்கலாம். ஆனால் அப்படி நுரையீரல் கிடைக்கிறது என்பது ரொம்ப கஷ்டம். ஏனென்றால் அப்பிடி கிடைக்கிட நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கணும், பிளட் குளுப் பொருந்தனும், உயரம் நிறை பொருந்தணும். இப்படி நிறைய இருக்கு அதனால இது ஈசி கிடையாது. இவ்வளவு இருக்கு என்பதே எனது கணவர் இறந்ததுக்கு பிறகு தான் தெரியும் அதனால தான் நுரையீரல் தானம் செய்ய பதிவு செய்துள்ளேன். இது நாம இருக்கும் போது செய்யப் போறதில்லை தானே இறந்ததுக்கு பிறகு தான் பண்ணுவாங்க அதனால நமக்கு தெரிய போறதில்லை . இது கண்டிப்பான செய்தால் நல்லா இருக்கும் என்று தான் நுரையீரல் தானத்திற்கு ஓகே சொன்னேன்.ஆனால் இதற்கு முதல் கமல் சேர் இந்த பதிவை மேற் கொண்டுள்ளார் என்றும் கூறினார்.


அத்தோடு கணவனுக்கு இறுதி சடங்கு செய்தது பற்றி கேட்ட போது எனது கணவர் ரொம்ப பிராக்டிக்கல் ஆனவர் அவருக்கு என்ன பிடிக்கும் எதை யோசிப்பார் என்றது எனக்கு மட்டும் தான் தெரியும். என்னோட ஹஸ்பன்ட் நான் தானே சடங்கு பண்ண முடியும் வேற யாரு பண்ணுவாங்க. அந்த டைம்ல நான் யோசிக்கல அப்படி எல்லாம் சொல்லுவாங்க என்று ஆனால் எனக்கு அவரை நல்ல படியா அனுப்பி வைக்கணும் என்றதால தான் அவரோட இறுதிச் சடங்ககை பண்ணினேன். அதுல என்ன தப்பு இருக்கு என்றும் அவர் கூறியதைக் காணலாம்.

அத்தோடு என்னுடைய இந்த மாற்றத்திற்கு எனக்கு உதவியாக இருந்த நணபர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement