• May 13 2024

திடீரென மயங்கி விழுந்த ஜனனி-பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 கடந்த வாரம் ஆடல் பாடலுடன் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த சீசனையும் கமலே தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் வீட்டில் 20 போட்டியாளர்கள் ஏற்கனவே இருந்த நிலையில், நேற்று வைல்டு கார்டு என்ட்ரியாக மைனா நந்தினி வந்துள்ளதால், தற்போது வீட்டில் 21 பேர் உள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6ன் முதல் கேப்டனாக ஜிபிமுத்து தேர்வாகி உள்ளது. எனினும் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் தெளிவாக தெரிகிறது. நேற்று கமலுடன் காமெடியாக பேசி ரசிகர்களின் மனதை அள்ளிய ஜிபி முத்துவுக்கு நேற்று திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. எனினும் இதையடுத்து, மருத்துவர்கள் அவரை பரிசோதித்து மருந்து கொடுத்தனர்.



எனினும் இதையடுத்து மதியம் வெளியான 2வது ப்ரோமோவில்,இந்த வார கேப்டனை தேர்ந்தெடுப்பதற்கான டாஸ்க் இடம்பெற்றது. அதில் சாந்தி, ஜனனி மாற்று ஜிபி முத்து கலந்து கொண்டனர் அதில் சாந்தியால் தாக்குபிடிக்க முடியாததால் அவர் டாஸ்கில் இருந்து விலகிவிட்டார் ஆனால், ஜி.பி. முத்துவும், ஜனனியும் கடுமையாக போட்டி நடப்பது போல இருந்தது.

இதையடுத்து தற்போது வெளியாகியுள்ள 3வது ப்ரமோவில், ஜிபி முத்துவைவை போட்டியாளர்கள் அனைவரும் தலைவரே.. தலைவரே என கிண்டலடித்து வருகின்றனர். அப்போது அழுதவாணன் தலைவரே... ஜெயிச்சா மீன் வாங்கிதரேன்... முட்டை வாங்கித்தரேனு சொன்னீங்களே என அவரை கிண்டல் செய்கிறார்.



ஒரு மணி நேரம் அப்படியே இருந்ததனால், ஆனால், ஜனனியால் தாக்கு பிடிக்க முடியாமல் மயங்கி விழுந்தார். இதனால், அசீம் அவரை தூக்கிச் சென்று மெத்தையில் படுக்கவைத்து முதல் உதவி அளித்தார். எனினும் இறுதியில் ஜி.பி.முத்து டாஸ்க்கினை வென்றார். மேலும் இந்த டாஸ்க்கில் பங்குபெறுவதற்கு முன், ஜி.பி முத்துவிற்கு கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. அத்தோடு நேற்று அவருக்கு டிப்ஸ் ஏற்றியுள்ளனர். இருப்பினும் இந்த டாஸ்க்கில் அவரின் விடாமுயற்சினால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் கேப்டனாக ஜிபிமுத்து வெற்றி பெற்றுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement