• May 07 2024

நான் கன்னித்தீவுக்கு செல்வதாக சொல்வது எல்லாம் ஒரு வதந்தி- குல தெய்வம் கோயிலுக்குச் சென்ற ட்ரெண்டிங் ஜோடி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரை உலகில் பரபரப்பாக பேசப்பட்ட திருமணங்களில் ஒன்று தான் சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரனின் திருமணம். இவர்கள் இருவருககும் இது இரண்டாவது திருமணமாக இருந்தாலும் தற்பொழும் ட்ரெண்டிங் ஜோடியாக வலம் வருகின்றனர்.

 உடல் பருமனான இவரை மகாலட்சுமி திருமணம் செய்தது திரையுலகத்தினரை மட்டுமின்றி அவரது ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி  பல்வேறு விமர்சனங்கள் ஏற்படுத்தியது.இந்நிலையில் திருமணத்திற்கு பின் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்த இந்த தம்பதியனை தூத்துக்குடி செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர் இதனை தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்தார் ரவீந்தர் சந்திரசேகர்.


ஒரு திருமணம் இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டது எனக்கே அதிர்ச்சியாகி உள்ளது. திருமணம் இவ்வளவு பேமஸ் ஆக வேண்டிய அவசியம் இல்லை.எங்கள் திருமணத்திற்கு முன்பு தமிழ் திரையுலகில் பிரபலத்தின் திருமணத்தை ஒளிபரப்பிய நிறுவனம் அதில் பெறாத வருமானத்தை எங்களது திருமணத்தை வெளியிட்டு பெற்றது என்பது ஒரு வித்தியாசமான செயல்.

செல்லும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு வாழ்த்து கிடைப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி” என்றார். நான் டால்மியாபுரத்தில் உள்ள எனது குலதெய்வம் கோவிலுக்கு சென்று வந்துள்ளேன்.நான் கன்னித்தீவுக்கு செல்வதாக சொல்வது எல்லாம் ஒரு வதந்தி என கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement