• Apr 27 2024

'எட்ட போடா டேய்...' அனிருத்தை பார்த்து கத்திய அந்த நபர்... அதுவும் இந்தப் பெண் பிரபலத்திற்காக..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய அளவில் பிரபல்யமான திரைப்பட இசையமைப்பாளராகவும், பின்னணிப் பாடகராகவும் இருந்து வருகின்ற ஒருவரே ராக் ஸ்டார் அனிருத். இவர் குறிப்பாக பல தமிழ்த் திரைப்படங்களிற்கு இசையமைத்து வருகிறார். 

அந்தவகையில் இவர் இசையமைத்த முதல் திரைப்படம் தனுஷ் நடித்த '3' ஆகும். இப்படத்தில் இடம்பெற்ற "வொய் திஸ் கொலவெறி டி.." என்ற பாடலின் மூலம் உலகளவில் மிகவும் பிரபலமடைந்தார்.


தன்னுடைய இசைப் பயணத்தின் தொடக்கத்தில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து வந்த இவர், தற்போது மற்ற படங்களுக்கும் இசையமைத்து அசத்தி வருகிறார்.

அதுமட்டுமல்லாது இளம் வயதிலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஒருவராகவும் விளங்கி வருகின்றார். இவர் வென்ற விருதுகளோ ஏராளம். இவருக்குள்ள ரசிகர்கள் பட்டாளங்களில் அதிகளவானோர் பெண்கள் ஆவார்.


இவ்வாறாக தென்னிந்திய அளவில் பிரபலமான இசையமைப்பாளரான அனிருத்தின் இசையில் பாடிய பின்னணி பாடகிகளில் ஒருவர் ஜோனிடா காந்தி. இவர் சமீபத்தில் நடைபெற்ற அனிருத்தின் இசை திருவிழாவில் அனிருத்துடன் இணைந்து பல பாடல்களை பாடித் தெறிக்க விட்டிருக்கின்றார்.


மேலும் இந்நிகழ்வில் இருவரும் இணைந்து மேடையில் பாடல் ஒன்றை பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ரசிகர் ஒருவர் ஜோனிடா காந்தியை ரசிப்பதற்காக அனிருத்தை பார்த்து "அனிருத் எட்ட போடா டேய்" என்று மிகவும் சத்தமாக கூறியுள்ளார்.


இந்த வீடியோ ஆனது தற்போது இணையத்தில் வெளியாகியது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement