• May 08 2024

டான் படத்தினால் தான் நான் மரியாதைக்குரியவனாக மாறிட்டேன்-எமோஷன் ஆன எஸ்.ஜே.சூர்யா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13-ந்தேதி வெளியான திரைப்படம் 'டான்'. இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் அட்லி இயக்கியிருந்தார். அத்தோடு இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது.

இப்படத்தில் எஸ். ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்ததோடு இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்தார். கதாநாயகியாக ப்ரியங்கா மோகன் நடித்திருந்தார்.

இப்படத்தில் சூரி, சமுத்திரக்கனி, விஜய் டிவி புகழ் சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற டான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.

இப்படத்தின் வெற்றி விழாவைக் கொண்டாடும் விதமாக சென்னையில் டான் வெற்றிக்கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எஸ்.ஜே.சூர்யா கூறும்போது, "டான் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றி எனக்கு மரியாதையான வெற்றியாக அமைந்துள்ளது.

ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, சிறுவர்கள் குடும்பத்துடன் வந்து கட்டியணைத்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நிகழ்வு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மாநாடு படத்தில் எனக்கு மாஸ் கிடைத்தது. ஆனால், டான் படத்தில் எனக்கு மரியாதை கிடைத்தது. இது உண்மையிலேயே மிகவும் சந்தோசமான விஷயம்". இவ்வாறு அவர் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement