• Jul 27 2024

எதிர்நீச்சல் சீரியலில் மீண்டும் கடத்தல் படலமா? உமையாள் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் கதிர்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

கோவிலில் அனைவரும் சித்தார்த்தின் வரவை எதிர்பார்த்து  காத்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் கரிகாலன் மற்றும் ஜான்சி ராணி இருவரும் காவடியை தூக்கிக்கொண்டு சாமி ஆடுவது போல நடிக்கிறார்கள். அவரைப் பார்த்ததும் குணசேகரன் டென்ஷன் ஆகிறார்.

அங்கே வந்த குணசேகரன் ஜான்சி ராணி வம்பு இழுத்து, மரியாதையாக இரண்டு பேரும் வெளியே போயிடுங்க என மிரட்டுகிறார். அதற்கு ஜான்சி ராணி, ஏன் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமா ஏதாவது காரியம் பண்ண போறியா என்ன? என்று  கேட்கிறார். இவர்களைப் பார்த்து தர்ஷினி அலறுகிறார்.


மறுபக்கம் சக்தி காரில் எங்கோ சித்தார்த்துடன் போய்க்கொண்டிருக்க கதிர் சக்திக்கு போன் செய்து, அந்த பையன் நம்ம கூட இருக்கிற வரைக்கும் தான் அந்த பொம்பளையை நம்ம வழிக்கு கொண்டு வர முடியும். ஜனனி விஷயத்தை நான் பார்த்துக்கிறேன் என சொல்லுகிறார்.

இன்னொரு பக்கம் ஜனனியை நான்கு ரவுடிகள் கடத்திக் கொண்டு செல்ல முயற்சிக்கின்றார்கள். அவர்களிடம், எங்க அம்மாவும் அஞ்சனாவும் எங்க?  என்று ஜனனி கேட்க, முதல்ல சித்தார்த் எங்கன்னு நீ சொல்லு என ஜனனியை ரவுடிகள் மிரட்டுகிறார்கள்.

இதைக் கேட்டு ஜனனி ஒன்றும் புரியாமல் சித்தார்த்தா? என கேட்க, அங்கே கார் ஒன்று வந்து நிற்கிறது. அந்த காரில் வந்தவர்களை பார்த்து ரவுடிகள் ஷாக் ஆகிறார்கள். காரில் வந்தது யார் என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது. இது தான் இன்றைய நாளுக்கான ப்ரோமோ.

Advertisement

Advertisement