தென்னிந்திய சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பு, இயல்பான குணம், மற்றும் வலுவான கதாபாத்திரத் தேர்வுகளால் ரசிகர்களை கவர்ந்த நடிகை சாய் பல்லவி, தனது சினிமா பயணத்தில் மிகப் பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளார். தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் வித்தியாசமான அடையாளத்தை உருவாக்கிய இவர், கவர்ச்சிக்காக அல்ல, இயல்பான நடிப்பிற்காக விரும்பப்படும் நடிகையாக மாறியுள்ளார்.

இவர் தனது வாழ்க்கையை சிறிய வருமானத்துடன், பின்னணி நடனக் கலைஞராகத் தொடங்கினார். மிகக் குறைந்த வசதிகளில் இருந்தாலும், அவரது கலை ஆர்வம், பொறுமை, மற்றும் திறமை அவரை முன்னேற்றத்திற்குக் கொண்டு வந்தது. 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ப்ரேமம்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
ப்ரேமம் படத்தின் வெற்றி, சாய் பல்லவிக்கு தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் உடனடி அங்கீகாரத்தை வழங்கியது.
மேலும் சாய் பல்லவிக்கு, ஃபிடா, லவ் ஸ்டோரி, அமரன், மற்றும் தண்டேல் ஆகிய படங்கள் வெற்றியைக் கொடுத்தது. இதனால், சாய் பல்லவி நடித்த ஒவ்வொரு படமும் விமர்சகர்களிடையே நல்ல மதிப்பீடுகளை பெற்றது.
இதனால் சாய் பல்லவி தற்பொழுது ஒரு படத்திற்கு 10 கோடி வரை சம்பளம் பெற்றுக்கொள்கிறார் என்று கூறப்படுகிறது. இது, அவரது படிப்படியான வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.
Listen News!