• May 19 2024

நானும் சென்னைக்காரன் தான் நயன்தாராவை ரொம்ப பிடிக்கும்- நாக சைதன்யாவின் ஜாலிப்பேட்டி!

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் நாகசைத்தன்யா மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் நடித்த திரைப்படம் தான் தாங்க்யூ . இப்படம் கமந்த 22ம் திகதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது.
இப்படத்தை பிரபல இயக்குநர் விக்ரம் குமார் இயக்கியிருந்தார்.

இந்தப் படத்திற்கான பிரமோஷன்களில் கலந்துக் கொண்ட நாக சைத்தன்யா சென்னை தன்னுடைய இதயத்திற்கு நெருக்கமான ஊர் என்று கூறியுள்ளார். அவரது அப்பா நாகார்ஜுனாவும் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், இருவரும் இணைந்தும் படங்களில் நடித்து வருகின்றனர்.

இந்தப் படம் முதல் நாளில் வெறும் 4.5 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்தது.இந்நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகவுள்ள இருமொழிப் படத்தில் நாக சைத்தன்யா கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு கிருத்தி ஷெட்டி ஜோடி சேர்ந்துள்ளார்.

மேலும் சென்னையில் தான் தன்னுடைய பள்ளி, கல்லூரி படிப்பை முடித்ததாகவும் சுமார் 19 ஆண்டுகள் சென்னையில்தான் தான் இருந்ததாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தான் சென்னைக்காரன்தான் என்று கூறியுள்ள அவர், சரவணபவன் மசால்தோசை, சாட் வகைகள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை லைப்ஸ்டைல் தன்னுடைய இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியில் கத்ரினா கையிப் மற்றும் தமிழில் நயன்தாரா தனக்கு பிடித்த நடிகைகள் என்றும் இந்த பட்டியல் மேலும் நீளும் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement