• May 19 2024

தைப்பொங்கலுக்கு விஷ் பண்ணினால் சித்திரை வருஷத்திற்குத் தான் ரிப்ளே பண்ணுவான்...ஜெய் பற்றிய உண்மையைப் போட்டுடைத்த சிவா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சாதிக்கத் துடிக்கின்ற ஒரு இளைஞராகவும், வளர்ந்து வருகின்ற ஒரு முன்னணி நடிகராகவும் விளங்குபவர் ஜெய். திரையுலகில் இவரை யாவருக்கும் தெரிந்த ஒரு முகமாக மாற்றிய படம் 'பகவதி'. இப்படத்தில் இவர் தளபதி விஜய்க்கு தம்பியாக நடித்திருந்தார். அதுமட்டுமன்றி தோற்றத்திலும் அச்சு அசல் விஜய் மாதிரியே காட்சி அளித்திருந்தார்.

இவர் விஜய்யின் உண்மையான தம்பியாக இருப்பாரோ எனப் பலரும் எண்ணிய நாட்களும் உண்டு. இவ்வாறாகப் பகவதியில் ஆரம்பித்த பயணம் பல தடைகளையும், ஏற்ற இறக்கங்களையும் தாண்டி 'சுப்பிரமணியபுரம்', 'வடகறி', 'அவள் பெயர் தழிழரசி', 'எங்கேயும் எப்போதும்', 'திருமணம் எனும் நிக்காஹ்', 'ராஐாராணி' எனத் தொடர்ந்து செல்கின்றது.

இவ்வாறாகப் பல படங்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகின்ற ஜெய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'எண்ணித்துணிக'. இப்படத்தை வெற்றிச்செல்வன் இயக்கியிருப்பதோடு ஜெய்யிற்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்திருக்கின்றார்.

அதுமட்டுமன்றி இவர்களுடன் இணைந்து அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, ஜி மாரி முத்து எனப் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் என்பன முன்னரே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்படத்தினுடைய இறுதிக்கட்டப் பணிகள் யாவும் முடிவடைந்த நிலையில் ரிலீஸிற்குத் தயாராகி விட்டது. அதாவது ஆகஸ்ட் 14-ஆம் திகதி வெளியாக இருக்கின்றது. இந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தினுடைய புரொமோஷன் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

அதனைத்தொடர்ந்து ஆடியோ லான்ஞ் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. அந்நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். அதில் ஒருவராக நடிகர் சிவாவும் கலந்து கொண்டிருக்கின்றார். அதில் இவர் படத்தினுடைய கதாநாயகன் ஜெய் பற்றி ஒரு சில உண்மைகளைப் போட்டுடைத்திருக்கின்றார்.

அதாவது "ஜெய் ரொம்பவே டெடிக்கேட்டான ஒரு ஆர்ட்டிஸ்ட் எனக் கூறிப் புகழ்ந்த அதேநேரம் ஜெய்யிற்கு ஜனவரி நியூ இயரிற்கு விஷ் பண்ணினால் அவன் ஏப்ரல் 14 தான் ரிப்ளே பண்ணுவான். அந்தளவிற்கு போனில் ரொம்பப் பிஸியான மனுஷன்" என சிரிச்சிக்கிட்டே கிண்டலாகக் கூறியிருக்கின்றார்.

அதுமட்டுமன்றி "லவ் பண்ணுறதற்காகவே ஹோம்வேர்க் பண்ணிக்கிட்டு இருக்கிற ஒரு நடிகன் என்றால் அது நம்ம ஜெய் தான்" எனவும் கூறிக்கலாய்திருக்கின்றார் நடிகர் சிவா. இவர் இவ்வாறு கூறியதும் மேடையில் இருந்த அனைவருமே குலுங்கி குலுங்கி சிரித்திருந்தனர்.

அதுமட்டுமல்லாது சிவா இவ்வாறு கூறியதை வைச்சுப் பார்க்கும் போது நம்ம ஜெய் உண்மையிலும் போனில் நேரத்தை செலவிடுவது குறைவா அல்லது படங்களில் பிஸியாக இருப்பதனால் போன் பார்ப்பதற்கு டைம் கிடைப்பதில்லையா எனக் குழம்பிப் போயுள்ளனர் நம்ம ஜெய் ரசிகர்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement