• Sep 20 2024

நான் சொல்றது பொய்யா இருந்தா செருப்பால அடிங்க...நடிகர் கூல் சுரேஷ்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம்  தான் லைகர்.மேலும்  இந்தப் படத்தில் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு விமர்சனங்களை பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.

சமூக வலைதளங்களிலும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது லைகர் திரைப்படம். இந்நிலையில் படத்தை பார்த்த நடிகர் கூல் சுரேஷ் லைகர் படம் குறித்த தனது ரிவ்வியூவை ஆக்ரோஷமாக கொடுத்துள்ளார். மேலும் அதில் அவர் கூறியிருப்பதாவது, ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய படம் லைகர்.

படத்தில் விஜய் தேவர்கொண்டாவின் ஒவ்வொரு அடியும் இடி போல விழுகிறது. நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்ப.மேலும்  நீ ஒரு இந்தியனு நிரூபிச்சுட்ட. ஒவ்வொரு இந்தியனும், மீசை வைச்சவன் எல்லாரும் இந்த படத்தை நிச்சயமாக பார்க்க வேண்டும். விஜய் தேவரகொண்டா 10 ஜெட்லீ, 20 ஜாக்கிசான் என அனைவரையும் கரைச்சு குடிச்சுருக்கார்.

அத்தோடு நான் சொல்றது பொய்யா இருந்தா என்னை செருப்பால அடிங்க என ஆவேசமாக கத்திய கூல் சுரேஷ் காலில் போட்டிருந்த செருப்பை தூக்கி காண்பித்தார். மேலும் இந்த படம் நன்றாக ஓடுதோ இல்லையோ, வசூலை அள்ளுகிறதோ இல்லையோ நிச்சயம் வரலாற்றில் இடம்பெறும் என்று கூறினார். அத்தோடு இந்த படத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்த ஆர்கே சுரேஷையும் புகழ்ந்த கூல் சுரேஷ் அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

எனினும் சமீப காலமாக ரிவ்வியூ கொடுக்கிறேன் பேர்வழி என படத்தை பார்த்து வெளியே வந்ததும் ஓவர் பில்டப் செய்து வருகிறார் கூல் சுரேஷ். சமீபத்தில் விருமன் படத்தை பார்த்துவிட்டு அதிதி ஷங்கரிடம் ஐ லவ் யூ என்று ப்ரபோஸ் பண்ணிய கூல், ஷங்கர் சார் என்னை உங்களின் மருமகனா ஏத்துக்காவிட்டால் முதல்வர் வீட்டின் முன்பு உண்ணாவிரதம் இருப்பேன் என்றார். பின்னர் என்ன ஆனதோ தெரியவில்லை, அதிதி எனக்கு தங்கை மாதிரி என அந்தர்பல்டி அடித்து இயக்குநர் ஷங்கரிடம் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement