• May 05 2024

''சான்ஸ் கிடைச்சா பிக் பாஸ் வீட்டை இரண்டாக்கிடுவேன்''.. பரபரப்பு தகவல் கூறிய எதிர்நீச்சல் மாரிமுத்து!

Jo / 8 months ago

Advertisement

Listen News!

வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் மாரிமுத்து. அதுமட்டுமின்றி வைரமுத்துவிடமும் சில காலம் உதவியாளராக இருந்தார். தொடர்ந்து கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கினார். இரண்டு படங்களுமே சொல்லிக்கொள்ளும்படியான வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து நடிகராக களமிறங்கினார் அவர். அதன்படி யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் பல படங்களில் நடித்தார். கமல் ஹாசன் நடித்த விக்ரம், ரஜினி நடித்த ஜெயிலர் என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 


சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார்.எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதில் அவரது எதார்த்தமான நடிப்பும், பேச்சும் அட்டகாசமாக இருப்பதனால் இவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து பேசிய மாரிமுத்து, "பிக்பாஸ் என்பது பெரிய ப்ளாட்ஃபார்ம். அதில் கலந்துகொண்டால் உலகம் முழுவதும் பிரபலமாகிவிடலாம் என்பது உண்மைதான். ஆனால் இப்போது நான் நீண்ட ப்ராஜெக்ட்டில் இருக்கிறேன். அது பெயரையும் பெற்று தந்திருக்கிறது. அந்த சீரியலை விட்டு எங்கேயும் நகரமுடியாது.


ஒருவேளை பிக்பாஸ் வீட்டுக்குள் போனால் வீட்டை ரெண்டாக்காமல் விடமாட்டேன். ஒரு உலுக்கு உலுக்கிடுவேன். நான் மட்டும் இந்த சீசனுக்குள் போனால் பிக்பாஸ் வரலாற்றிலேயே இந்த சீசன் தான் முதலிடத்தில் இருக்கும்" என கூறியிருந்தார்.இவர் இவ்வாறு கூறியிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement