• Apr 30 2024

நான் சாப்பாட்டுக்கு வழி இல்லாம கடன் வாங்கல..! மோசமான அனுபவங்களை பகிந்த ரவீந்தர்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தரனும், சீரியல்களில் நடித்துப் பிரபலமான மகாலட்சுமியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்திரன் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை விமர்சித்ததன் மூலம் மக்களிடையே பிரபல்யம் ஆனார்.  

எனினும் திருமணத்திற்கு பின்னர் ரவீந்திரன் – மகாலக்ஷ்மி ஜோடி தொடர்ந்தும் உருவ கேலிக்கு ஆளாகி வருகின்றனர். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்களது வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து வருகிறார்கள் ரவீந்திரன் – மகாலக்ஷ்மி ஜோடி. 


அத்துடன், சமீபத்தில் பணமோசடி வழக்கில் ரவீந்தரை கைது செய்த பொலிஸார் அவரை சிறையில் அடைத்தனர். எனினும் அவர் அண்மையில்  ஜாமினில் விடுதலை ஆகி வர, சமூக வலைதளங்களில் ரவீந்தர் மகாலட்சுமியை விவகாரத்து செய்யப்போகிறார் என தகவல்களை கிளப்பி விட்டனர்.

எனினும், ஜெயிலில் இருந்து வெளியில் வந்த ரவீந்தர் தனது மோசமான அனுபவங்கள் மற்றும் மனைவியின் ஆதரவு குறித்து பேட்டி அளித்துள்ளார்.

குறித்த பேட்டியில் ' நான் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் கடன் வாங்கல. நாலு படம் தயாரிச்சு லோச்ட் ஆகிடுச்சு' என விளக்கம் அளித்துள்ளார். 

இதனை பார்த்த நெட்டிசன்ஸ் வழக்கம் போலவே ' கல்யாணத்துக்கு முன்னாடி கடன் இருக்கு என்று சொல்லி இருந்தால் மஹா கல்யாணமே பண்ணியிருக்க மாட்டாங்கன்னு தானே இப்படி ஒரு பிளான்' என்று மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement