• May 19 2024

ரச்சிதா மேல எனக்கு அது இருக்கு... உண்மையை போட்டுடைத்த ராபேர்ட் மாஸ்டர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆனது நாளுக்கு நாள் களை கட்டிய வண்ணமே இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபேர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவாஷினி, மைனா நந்தினி மற்றும் தனலெட்சுமி என 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.


என்றுமே இல்லாத அளவிற்கு குறிப்பாக இந்த சீசன் இரண்டு வாரம் கடந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்ற ஜிபி முத்து தனது குடும்பத்தினர் நியாபகமாக இருப்பதாக கூறி பிக்பாஸ் வீட்டை விட்டு திடீரென அவராகவே வெளியேறினார். அதனைத் தொடர்ந்து மெட்டி ஒலி சீரியல் நடிகை சாந்தி, அசல் கோலார், மகேஸ்வரி, நிவாஷினி மற்றும் செரீனா ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகியுள்ளனர்.


இந்நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்த ராபேர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து ரச்சிதாவிற்கு காதல் வலை வீசி வந்தார். அதுமட்டுமல்லாது இவரின் அட்ராசிட்டி ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் ரசிகர்கள் கன்னாபின்னவேன்று கமெண்ட் அடித்தனர். 


இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் சிக்கி குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார் ராபர்ட் மாஸ்டர். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்துள்ள ராபேர்ட் தற்போது பேட்டிகளை அளித்து வருகின்றார்.

அந்தவகையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் ரச்சிதா மீது தனக்கு கிரஸ் இருப்பது உண்மை தான் என கூறியுள்ளார். மேலும் "அது வெறும் கிரஸ் மட்டும் தான். கிரஸ் வேற, காதல் வேற. எனக்கு வெளிய லவ்வரும் இருக்காங்க" என கூறினார். மேலும் அவரது லவ்வர் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிய மோதிரம் குறித்து கேட்ட போது, என்மேல இருந்த கோபத்தால அனுப்பி இருக்கலாம் எனப் பதிலளித்திருக்கின்றார்.


அத்தோடு "நான் வெளிய வந்து பேசுன பிறகு என் கேர்ள் பிரண்ட் புரிஞ்சுக்கிட்டாங்க. அவுங்களுக்கும் ஒரு கிரஸ் இருக்கு. நானும் அவர்கிட்ட பேசி இருக்கேன். அதே மாதிரி ரச்சிதா மேலயும் எனக்கு ஒரு கிரஸ். அவ்வளவு தான் அது" என தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமல்லாது ரச்சிதா பிக்பாஸ் வீட்டில் இன்னமும் தனது முழு சுயரூபத்தையும் காட்டவில்லை என்றும் கூறியுள்ளார். ராபேர்ட் மாஸ்டர் அளித்துள்ள இந்த பேட்டி ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement