• Apr 26 2024

அது எப்படிப்பா எனக்கே தெரியாம நான் பங்களா கட்டுவேன்- குழப்பதில் இருக்கும் ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்த நிஷா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் பல சீசன்களைக் கடந்து சூப்பர் ஹிட்டாக ஓடி முடிவடைந்த ரியாலிட்ரி காமெடி ஷோவான கலக்கப் போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகியவர் தான் அறந்தாங்கி நிஷா. பட்டி மன்றம் பேச்சாளராகிய இவர் ஸ்டாண்டப் காமெடியனாகவே நிகழ்ச்சியில் அறிமுகமாகினார்.

அதனைத் தொடர்ந்து பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வருகின்றார். இது தவிர தொகுப்பாளராகவும் வலம் வருவதோடு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.நிஷா பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டார்.

அதில் அவர் 70 நாட்கள் அவரை தாக்குப்பிடித்தார். இந்நிலையில் நிஷா பிக் பாஸ் மற்றும் விஜய் டிவியில் சம்பாதித்த பணத்தில் ஒரு பெரிய பங்களா கட்டி இருக்கிறார் என ஒரு செய்தி இணையத்தில் அதிகம் வைரல் ஆனது.

அதற்கு விளக்கம் கொடுத்து இருக்கும் அறந்தாங்கி நிஷா கூறி இருப்பதாவது..

"அது எப்படிப்பா எனக்கே தெரியாம நான் பங்களா கட்டுவேன், பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்த சொல்லுங்கப்பா, இத பாத்துட்டு நிறைய பேரு எனக்கு வாழ்த்து சொன்னீங்க, நிறைய பேரு என்ன கிண்டல் பண்ணீங்க, இது வதந்தி தான், ஆனா முயற்சி செஞ்சா முடியாதது எதுவுமே இல்ல சீக்கிரமா இப்படி ஒரு பங்களா கட்டுவோம்… சத்தியமா சொல்றேன் இது என் வீடு இல்லங்கோ" என தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement