• May 07 2024

நடிகரானதுக்கு பிறகு என்னால Wine Shopகளுக்கு போக முடியல- வருத்தம் தெரிவித்த நடிகர் சித்தார்த்

stella / 7 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னத்தின் உதவி இயக்குநராக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தவர் தான் நடிகர் சித்தார்த். அதன் பின்னர் பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகன் ஆனார்.இதைத் தொடர்ந்து  தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் மாறி மாறி நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக சித்தா என்னும் திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.. பழனியில் இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து 3 மாதங்கள் நடைபெற்ற நிலையில் படத்தின் வெற்றிக்காக வேண்டி, பழனியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படக்குழுவினருடன் சாமி தரிசனம் செய்திருந்தார் சித்தார்த்.


சித்தப்பா மற்றும் ஒரு பெண்குழந்தைக்கு இடையிலான உறவை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் சித்தார்த் பங்கு கொண்டு வருகின்றார்.இந்நிலையில் பேட்டியொன்றில் அவரிடம் நடிகராக மாறியதால் எந்த இடங்களுக்கு போக முடியவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.


இதற்கு பதிலளித்த சித்தார்த், நடிகராவதற்கு முன்னதாக தான் சாப்பிட்ட கையேந்தி பவன்களில் தற்போதும் சாப்பிடுவதாகவும் பிடித்த கடைகளுக்கு சென்று ட்ரஸ் எடுப்பது போன்றவற்றை எல்லாம் தன்னால் தற்போதும் செய்ய முடிவதாகவும் ஆனால் உதவி இயக்குநராக இருந்தபோது அடிக்கடி சென்ற Wine Shopகளுக்கு தற்போது தன்னால் போக முடியவில்லை என்றும் அது ஒன்றுதான் வருத்தம் அளிப்பதாகவும் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement