• Apr 28 2024

ஜெயம் ரவி படத்திற்காக 400 ரூபா கொடுத்தாங்க,- என்னோட முதல் ஹீரோ அவர் தான்- விஜய்சேதுபதி சொன்ன சுவாரஸியமான தகவல்

stella / 7 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் இறைவன்.இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். இப்படம் வரும் செப்டெம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு நடிகர் விஜய் சேதுதியும் கலந்து கொண்டார்.


அப்போது பேசிய ஜெயம் ரவி,நான் எம் குமரன் சன் ஒவ் மகாலட்சுமி படத்தில் வரும் அம்மா பாடலில் நடிக்கும் போது எனக்கு 400 ரூபா தந்தாங்க,வழமையாக அப்படி ஏதும் சைட்ல நின்றாலே 250 ரூபா தான் தருவாங்க,ஆனால் அன்டைக்கு 400 தந்தது வந்தோசமாக இருந்தது.நான் பார்த்த முதல் ஹீரோ ஜெயர் ரவி தான்.


அவர் கூட போகன் படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.ஆனால் கால்சீட் பிரச்சினையால் நடிக்க முடியாமல் போய் விட்டது. எதிர்காலத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் கட்டாயம் சேர்ந்து நடிப்போம் என்று கூறியுள்ளார். இவரை அடுத்து பேசிய ஜெயம் ரவி,விஜய் சேதுபதியை தனிப்பட்ட ரீதியில சந்திச்சு பேசியிருக்கிறேன்.


அவர் பார்த்த முதல் ஹீரோ நான் தான் என்று அவர் சொன்னாரு,ஆனால் எனக்கு ஒரு ஆசை நான் இயக்கும் முதல் படத்தில் அவர் தான் ஹீரோவாக நடிக்கனும்.எல்லாமே அவரே பண்ணிடுவாரு. நாம எதுவுமே பண்ண தேவையில்லை. அப்படி சிறப்பாக நடிக்கக் கூடிய நடிகர் என்று பெருமையாகப் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement