• May 18 2024

தாலியை கழட்டி வீசப் பார்த்த நந்தினி- பளார் என்று அறைவிட்ட விசாலாட்சி- கோபத்தில் பேசிய ஈஸ்வரி- Ethirneechal Promo

stella / 7 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில்,பணம் கட்டவில்லை என்பதற்காக ஒருவர் வந்து நந்தினியைத் திட்ட நந்தினி பணம் தானே வேணும் என்று சொல்லி விடடு தாலியைக் கழட்டிக் கொடுக்கின்றார்.


அதைப் பார்த்த விஷாலாட்சி புருஷன் குத்துக்கல் மாதிரி இருக்கிறான்,நீ தாலியைக் கழட்டி கொடுக்கிற என்று சொல்ல நந்தினி, எனக்கு அது வெறும் செயின் மட்டும் தான் வேணும்னா அதை அறுத்து எறிஞ்சிடுவேன் என்று சொல்கின்றார்.

இதைக் கேட்ட விசாலாட்சி நந்தினியை அடிக்கின்றார்.தொடர்ந்து ஜீவானந்தத்தின் குழந்தை பற்றி கதிர் கேட்க அதற்கு ஈஸ்வரி இதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லாத விஷயம், நீங்க இதில தலையிடாதீங்க என்று சொல்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement