• May 19 2024

'எட்டு ஆண்டுகள் ஆகியும் இதனை என்னால் மறக்க முடியாது'- சமந்தாவுடன் நடித்தது குறித்து நாகசைத்தன்யா போட்ட பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் இறுதியாக காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படம் வெளியாகியிந்தது.

இதனைத் தொடரந்து தற்பொழுது குஷி ,சகுந்தலம் ,யசோதா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவ்வாறு தொடர்ந்து பல படங்களில் பிஸியாக இருந்து வரும் இவர் கடந்த ஆண்டு தனது காதல் கணவரைப் பிரிவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை சமந்தாவுடன் இணைந்து நடித்த மனம் திரைப்படம் குறித்து நினைவு கூர்ந்துள்ளார் நாகசைத்தன்யா. எட்டு ஆண்டுகளுக்கு முதல் வெளியாகிய இப்படத்தில் நாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா மற்றும் நாக சைதன்யா ஆகிய மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்திருந்தனர்.

இந்த படம் ரிலீஸ் ஆகி எட்டு ஆண்டுகள் ஆனதை அடுத்து இது குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து உள்ள நாக சைதன்யா இந்த படம் தனது வாழ்வில் மறக்க முடியாத படம் என்று தெரிவித்திருந்தார் .

இந்த படத்தின் இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நாக சைதன்யா நடித்து வருகிறார் என்பதும் அந்த படத்தின் டைட்டில் தேங்க்யூ என்பது குறிப்பிடத்தக்கது

https://www.youtube.com/embed/66paDJnH4XU

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement