• May 19 2024

3ஆண்டுகள் என்னை பயன்படுத்திய என் முன்னாள் கணவர்- பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மும்பை பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தன் காதல் கணவரான ரித்தேஷை பிரிந்துவிட்டதாக அண்மையில் தெரிவித்து இருந்தார்.. அதனை தொடர்ந்து ஆதில் கான் துரானி என்பவரை காதலிப்பதாக கடந்த காதலர் தினத்தன்று தெரிவித்தார். இந்நிலையில் ராக்கி சாவந்த் குறித்து அவரது முன்னாள் கணவர் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னாள் கணவர் ரித்தேஷ் சிங் தனது சமூக கணக்குகளை முடக்கி விட்டார் என கூறி ரித்தேஷ் மீது போலீசில் நேற்று புகார் அளித்தார் ராக்கி சவாந்த். மேலும் இவரின் புகார் பற்றி பேசிய முன்னாள் கணவர் ரித்தேஷ் சிங், அவரது குற்றச்சாட்டுகளுக்கு சட்டப்பூர்வ முறையில் பதிலளிப்பேன். நிலைமை வெளிப்படையாக தெரிகிறது. கோடிக்கணக்கில் அவருக்காக பணம் வாரி இறைத்திருக்கிறேன்.

மேலும் அதனை பெற்று கொள்ளும்போது, அவருக்கு ஒரு பிரச்னையும் இல்லை. நான் செலவு செய்வது நின்றவுடன், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்துகிறார். இன்ஸ்டாகிராம் பதிவால் உறவு முடிந்து போனதுபற்றி இதற்கு முன் நீங்கள் கேள்விபட்டு உள்ளீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

வருங்காலத்தில், அவதூறு ஏற்படுத்த என் மீது இன்னும் பல குற்றச்சாட்டுகளை கூட அவர் தெரிவிப்பார்.. அவரும், அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல விரும்பினோம் என்று கூட சொல்வார். அவரால் இந்த நாடகம் போட மட்டுமே முடியும். அவரை விட்டு விலகி விட்டேன். வாழ்வில் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். 3 ஆண்டுகளாக அவர் என்னை பயன்படுத்தி வந்துள்ளார்.

அத்தோடு அவரிடம் ஒரு கார் கூட கிடையாது. வீட்டில் எந்த பொருட்களும் கிடையாது. அவரது வீட்டில் வைத்திருக்கும் பொருட்கள் எல்லாம் எனது பணத்தில் வாங்கியவை. நான் வாங்கி வைத்த பொருட்களை பயன்படுத்தி கொண்டு, வெட்கமேயில்லாமல் வீட்டில் சட்டவிரோத வகையில் மற்றொரு நபருடன் இருக்கிறார் என நடிகை ராக்கி சவந்த் குறித்து அவரது முன்னாள் கணவரான ரித்தேஷ் சிங் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement