• Sep 20 2024

'நீங்க எப்படி என்னோட பெயரைச் சொல்லி கூப்பிடலாம்'-நடிகை தேவயானியின் திமிரை அடக்கிய மணி வண்ணன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் அஜித், விஜய், விக்ரம் போன்ற டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து அதிக ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. தமிழைத் தவிர பெங்காலி மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்தவர்.

இவர் இயக்குநர் ராஜகுமாரன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்ததோடு இவருக்கும் இனியா, பிரியங்கா என இரு பிள்ளைகள் இருக்கின்றனர்.அத்தோடு இப்பொழுது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவதோடு சின்னத்திரை சீரியல்களிலும் நடித்த வருகின்றார்.

இந்த நிலையில் தேவயானியை பற்றி தெரியாத சில சுவாரஸ்ய விஷயங்களை இயக்குநர் களஞ்சியம் என்பவர் பகிர்ந்துள்ளார். அதில் அவர் சொன்னது.

தேவயானியை வைத்து ஒரு புது படம் பண்ணிக் கொண்டிருக்கும்போது போட்டோ ஷூட்டில் தேவயானியை வைத்து பூபதி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தேவயானி இங்கே திரும்புங்கள் என சொல்லிவிட்டார் கோபமடைந்த தேவயானி நீங்கள் எப்படி எனது பெயரை வைத்து கூப்பிடலாம் என கேட்டு செம கோபமாகி உள்ளாராம் பின் இயக்குநர் கேமராமேன் தவிர என்னை யாரும் தேவயானி என கூப்பிடவே கூடாது என ஓவராக பேசிவிட்டாராம்.

மேலும் அந்த போட்டோகிராபர் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்லிவிட்டார். அதே சமயம் அவர் என்னை இனி மேடம் என்றுதான் அழைக்கவேண்டும் எனவும் கூறினார். போட்டோகிராஃபர் உடன் சேர்ந்து பலரும் உட்கார்ந்து மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என உட்கார்ந்து விட்டனர். இந்த நிலையில் தேவயானியை முரளி போய் சமாதானப்படுத்தினார் ஆனால் தேவயானி சமாதானம் ஆகவில்லை என்ற பிரச்சனை அப்பொழுது பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்த சமயத்தில்தான் பத்து நாட்கள் கழித்து நடிகர் மணிவண்ணன் சார் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தார் வந்த உடனேயே அவர் அந்த பொண்ணு எங்கே என கேட்டார். தேவயானி வந்ததும் மணிவண்ணன் சார் கேட்ட முதல் வார்த்தை எதுக்குமா பெயர் வைத்திருக்கிறார்கள் பெயர் வைத்து கூப்பிடுவதற்கு தானே என கேட்டார். இங்கெல்லாம் கூப்பிடனும் இங்கு கூப்பிட கூடாது என்று பெயர் வைக்கிறார்களா எல்லோரும் மணிவண்ணன் சார் இங்க வாங்க போங்க மணிவண்ணன் வரான் போறான் அப்படின்னு சொல்லும் பொழுது நான் அவர்களை எல்லாம் கூப்பிட்டு மன்னிப்பு கேட்க சொல்ல முடியுமா.?

பெயரை வைத்தது கூப்பிடுவதற்கு தான் உன் பெயரை நாலு பேர் சொல்லும் பொழுது நாலு பேருக்கு உன் பெயர் தெரியும் என்று சொன்னார். ஆனால் நீ நடந்து கொண்ட விதம் சரியில்லை முதலில் நீ தான் மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறினார். இதை உணர்ந்துகொண்ட பின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து ஆல்பத்தை பார்த்து விட்டு பூபதி நீ சிறப்பாக பண்ணி இருக்கிறாய் என் மேல தான் தப்பு என கூறி தனது தவறை தேவயானி உணர்ந்தாராம் என்று கூறியிருக்கிறார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

https://www.youtube.com/embed/5GFqvFlN1tI

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement