பீஸ்ட் படத்தின் மோசமான விமர்சனங்களைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. முதல் முறையாக விஜய் தெலுங்கு இயக்குநரின் படத்தில் நடிப்பதால் இப்படத்தின் எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகமாகவே காணப்படுகின்றது. இப்படத்தை இயக்குநர் வம்சி இயக்கி வருகின்றார்.
இப்படத்தில் கதாநாயகியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர். இவர்களுடன் ஷாம் சரத்குமார் குஷ்பு என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றது.
இன்று இப்படத்திலிருந்து புதிய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. அதே போல இப்படத்தின் டப்பிங் பணிகளும் நடைபெற்று வருவதாக நடிகர் ஸ்ரீமன் தெரிவித்திருந்தார். அத்தோடு இப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் வாரிசு பற்றி குஷ்பூ சொன்ன பொய் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு முன்பே போட்டோ வெளியானபோது 'நான் விஜய்யை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்த போது எடுத்த போட்டோ அது. நான் வாரிசு படத்தில் நடிக்கவில்லை' என கூறி இருந்தார்.
தற்போது உண்மை தெரியவந்துவிட்ட நிலையில் அது பற்றி குஷ்பூ விளக்கம் அளித்திருக்கிறார். "தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரட்டும் என காத்திருந்தேன். அதனால் தான் நான் எதுவும் சொல்லவில்லை" என குஷ்பூ கூறி இருக்கிறார்.அதனால் அவரை நெட்டிசன்கள் தற்போது கலாய்த்து வருகின்றனர்.
Listen News!