ஜி.பி. முத்துவை தொடர்ந்து மேலும் ஒரு போட்டியாளரும் பிக் பாஸ் 6 வீட்டில் இருந்து வெளியே செல்ல விரும்புகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
உலகெங்கும் ரசிகர்களை கொண்ட பிக் பாஸ் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9ம் தேதி ஆரம்பமாகி மூன்றாவது வாரம் இடம்பெறுகின்றது. பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்தே பார்வையாளர்களை கவர்ந்த ஜி.பி. முத்து தன் பிள்ளைகளை பிரிந்து இருக்க முடியவில்லை என்று அழுதார். எனினும் இதையடுத்து எனக்கு பிள்ளைகள் தான் முக்கியம் என்று கூறிவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறினார்.
ஜி.பி. முத்துவை அடுத்து வி.ஜே. மகேஸ்வரியும், நான் எங்க வீட்டுக்கு போகிறேன் என்று பிக் பாஸிடம் கூறி வருகிறாராம். மேலும் அவருக்கு பிக் பாஸ் 6 வீட்டில் இருக்க பிடிக்கவில்லையாம். இப்படி இஷ்டமில்லாதவர்களை ஏன் போட்டியாளர்களாக அழைத்து வர வேண்டுமென்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எதற்கெடுத்தாலும் அழுகிறார் வி.ஜே. மகேஸ்வரி. இதனால் அவரை அழுமூஞ்சி என்று பார்வையாளர்கள் கூறிவருகிறார்கள். உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்த்தோம். ஆனால் நீங்கள் நடந்து கொள்ளும் விதம் ஏமாற்றம் அளிக்கிறது என பிக் பாஸ் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு தனலட்சுமி கூட இருந்துவிட்டு போகட்டும், ஆனால் இந்த மகேஸ்வரியை முதலில் விரட்டிவிடுங்கள் பிக் பாஸ் என்று நாங்கள் தான் அப்பொழுதே கூறினோமே. தற்போது அவரே கிளம்புகிறேன் என்கிறார், அனுப்பிவிடுங்கள். அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து பெரிதாக எதையும் செய்யவில்லை என்கிறார்கள் பார்வையாளர்கள்.
Listen News!