• May 18 2024

தனது வீட்டில் ஏற்பட்ட திடீர் சோகத்தால் ரோட்டில் நின்று கதறி கதறி அழுத தொகுப்பாளினி அஞ்சனா

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் மியூசிக் தொலைக்காட்சி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகியவர் தான் அஞ்சனா ரங்கன். இவர் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபற்றி வரும் தொகுப்பாளினி மணிமேகலையின் சகோதரியும் ஆவர்.

மணிமேகலை முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த உசைன் என்பவரைத் திருமணம் செய்ததால் தனது குடும்பத்திலிருந்து பிரிந்த வாழ்கின்றார்.மேலும் அஞ்சனா கயல் பட நடிகர் சந்திரன் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு அழகான ஆண் குழந்தை கூட பிறந்தது.

திருமணத்திற்குப் பின்னர் தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தொகுப்பாளினியாக அஞ்சனா கலக்கி வருகிறார். ஜி தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்குபெற்று வந்தார்.

இது தவிர இவர் இசை வெளியீட்டு விழா, சினிமா தொடர்பான விழாக்கள் மற்றும் கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.அத்தோடு அவ்வப்போது எடுக்கும் போட்டோஷூட் படங்களையும் அஞ்சனா பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் அஞ்சனா வீட்டில் துக்க சம்பவம் நடந்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, அஞ்சனாவின் மாமனாரும், கயல் சந்திரனின் தந்தையுமான சுப்ரமணியன் உயிரிழந்திருக்கிறார்.

இவருடைய இறுதிச் சடங்கின்போது அஞ்சனா ரோட்டில் நின்று கதறி கதறி அழுது இருக்கிறார். அந்த புகைப்படம், வீடியோக்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் மெசேஜ்களை பதிவு செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அஞ்சனாவின் சினிமா நண்பர்கள், ஆங்கர்கள், விஜே ஃபிரண்ட்ஸ் பலரும் அஞ்சனா மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement