• May 05 2024

பிரபல பாடகரின் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகத்தால் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்ட அவரது உடல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல ஹிந்தி பாடகர் கிருஷ்ண குமார் நேற்றைய தினம் மாரடைப்பால் திடீரென இறப்புக்குள்ளானார். இவருடைய அகால மரணம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கொல்கத்தாவில் ஒரு நேரடி இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் நோய் வாய்ப்பட்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் தனது ஹோட்டலுக்குச் சென்ற இவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

பிரபலங்களும், ரசிகர்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் கே கே-இன் மரணம் இயற்கைக்கு மாறானது என கொல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் அவரின் உடல் இன்று பிரேத பரிசோதனையும் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு இவரின் இறப்பிற்கு ரசிகர்களும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் முக்கியமாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement