• May 03 2026

எஸ்.ஜே.சூர்யாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு...!– உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இதோ!

shali / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்தியாவின் நடிகர் மற்றும் இயக்குநர் எனப் பல பரிமாணங்களில் உள்ள எஸ்.ஜே.சூர்யா மீது வருமான வரித்துறை வழக்குத் தொடரப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, உயர்நீதிமன்றம் விசாரணை நடைமுறைகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தனக்கு எதிராக தொடுக்கப்பட்ட இந்த வழக்கு குறித்து எஸ்.ஜே.சூர்யா கூறுகையில், "நான் எந்த தவறும் செய்யவில்லை என்றதுடன் என் வருமானம் அனைத்தும் சட்டப்படி செலுத்தப்பட்டுள்ளது" என்றார். மேலும் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ஆழமாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும், அதனை சட்டப்படி நிரூபிக்க தேவையான ஆதாரங்களை சமர்ப்பிக்க தயார் என்றும் சூர்யா தெரிவித்தார்.


உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணையை விரைவாக நடத்த வேண்டும் எனப்பட்டுள்ளது. இது எஸ்.ஜே.சூர்யா மீது எந்த விதமான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை முடிவு செய்யும் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த வழக்குகள் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

Advertisement

Advertisement